ஞாயிறு, மார்ச் 03, 2013

கல்லூற்று ஊரணி


              கடந்தவாரம் மதுரையில் உறவினர் வீடு சென்றேன். எப்போது மதுரை வந்தாலும் நண்பர் எழுத்தாளர் S.அர்ஷியாவுக்கு போன் செய்து சந்திப்பது வழக்கம், அதன் படி நண்பர்க்கு போன்போட எதிர்முனையில் என்ன சார், நலமா! எங்க இருக்கீங்க? என்றார், மதுரை ஆரப்பாளையம் வந்துள்ளேன் என்றேன். வேலைமுடிந்தபின் கோரிப்பாளையம் வந்துடுங்க என்றார், மதியம் 12 மணிக்கு கோரிப்பாளையத்தில் நண்பரை சந்தித்தேன், ஒவ்வொருமுறை சந்திப்பின் போதும் நேரம் கிடைத்தால் மதுரைக்கு பக்கத்தில் உள்ள சிலர் அறிந்தும் பலர் அறியாத இடங்களுக்கு செல்வோம்.

             மதுரையில் 35 வருடங்கள் இருந்து இப்போது விருதுநகரில் வாழ்ந்துவந்தாலும் மதுரையில் வாழ்ந்தபோது, மீனாட்சிஅம்மன் கோவில்.திருப்பரங்குன்றம், அழகர்மலை மற்றும் காந்திமியூசியம், திருமலைநாயக்கர் மஹால் என இந்த இடங்களுக்கு மட்டுமே அடிக்கடி சென்றுள்ளேன். மதுரையை சுற்றி பல மலைகளும் அதன் சார்ந்த வரலாற்று சிறப்புகளை பசுமைநடை இயக்கம் மூலம் நான் அறிந்துகொள்ள நண்பர் அ.முத்துகிருஷ்ணன் உதவியதுபோல், நண்பர் அர்ஷியா அவர்கள் மூலம் மதுரையின் அருகில் உள்ள இயற்கை அழகுகொஞ்சும் இடங்களை பார்த்து ரசிக்கமுடிந்தது.
       அவரது பொய்கைக்கரைப்பட்டி நாவல் படித்த போது இவ்வளவு அழகான இடங்கள் மதுரையில் உள்ளதா என ஆச்சரியப்பட்டபோது, ஒரு முறை அவரைசந்தித்தபோது பொய்கைக்ரைப்பட்டி கிராமத்திற்கே கூட்டிசென்றார், அழகர்மலைக்கு செல்லும் பாதையில் அழகர்மலைக்கு அடிவாரத்தில் உள்ள கிராமத்தின் பெயர் பொய்கைகரைப்பட்டி, அந்த கிராமத்தை பலர் கடந்து சென்றாலும் அந்த கிராமத்தின் அழகை பலர் அறிந்து இருக்கமாட்டார்கள், கிராமத்தை ஒட்டி மேற்கே செல்லும் பாதையில் சென்றால் மிகப்பெரிய தெப்பக்குளம் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது, அந்த குளத்தின் படியில் உட்கார்ந்து நான்குபக்கமும் கண்களால் சுற்றிபார்க்கும் போது அழகுஅழகு தான்,
    அங்கிருந்து வடக்கே ஆரம்பிக்கும் அழகர்மலையின் அடிவாரம் தொடங்குகிறது, கரையில் உள்ள ஆழமரம்தான் நாவலின் அட்டைபடமாக உள்ளது, அந்த இடத்தைவிட்டு நகரவே மனம் இல்லை, கவிஞராக இல்லாதவரும் கவிஞர்களாக மாறிவிடுவர். பார்த்துவிட்டு வந்து நண்பர்களிடம் சொன்னபோது, நண்பர் ஒருவர் அழகர்கோவில் சென்றபோது அந்த இடத்திற்கு சென்றுவந்து ஆச்சரியப்பட்டார், எத்தனையோமுறை அழகர்கோவில் சென்றுஇருந்தாலும் நீங்கள் சொன்னபிறகுதான் இதுபோன்ற இடத்தை அறிந்துகொள்ளமுடிகிறது என்றார்.
                 அடுத்த முறை நண்பரை சந்தித்தபோது பைக்கில் அலங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பாதையில் 5கி.மீட்டர் தள்ளி சாத்தையார் அணை சென்றோம். அப்படியொரு அணை இருப்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன் விரகனூர் அணைதான் மதுரைக்கு அருகில் உள்ளது என நிணைத்த எனக்கு இது ஆச்சரியப்பட்டது, இரண்டு மலைகளுக்கு இடையே இந்த அணைகட்டப்பட்டுள்ளது , மலைபாதைவழியாக வாடிப்பட்டி ஊருக்கு செல்லலாம் அந்த மலைபாதை குமுளி செல்லும் பாதையை போல் இருந்தது அங்கிருந்து அணையின் மொத்த அழகையையும் ரசிக்கும் போது மனம் குளிர்ந்துவிடுகிறது

.
             இந்த முறையும் பயணம் என இடத்தை எனக்கு தெரிவிக்காமல் பைக்கில் புறப்பட்டார், பைக்கை இப்போதுதான் வேலைபார்த்துள்ளார், வேறு பைக் வாங்கிடலாமே சார் என்றேன், அதற்கு இந்த பைக் என குடும்ப உறுப்பினர் போல் என்றும் இருக்கும் என்னுடன் என. தல்லாகுளம், பாண்டியன் ஹோட்டல் வழியாக நத்தம் பாதைக்கு வண்டியை திருப்பினார். ரிசவர்லைன் கடந்த போது,
          1980ல் நான் நரிமேட்டில் இருந்து புதூர் ITI க்கு படிக்க சைக்கிளில் இந்த பாதைவழியாக தான் நண்பருடன் செல்வேன் அப்போது இந்த பகுதி ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் இப்போது இந்தபகுதியை பார்த்தபோது ஆச்சரியமாக உள்ளது, நாராயணபும் கண்மாயும் அதை சுற்றிலும் உள்ள வயல்வெளிகள் இன்று கட்டிடமாக உருமாறியுள்ளது,
        ஐய்யர் பங்களாவை தாண்டியும் கட்டிடங்களின் வளர்ச்சி பிரமிப்பைதந்து, அங்கிருந்து கிழக்குநோக்கி ஒருபாதை மாட்டுதாவணிவரை செல்கிறது. எனில் மதுரையின் அசூரவளர்ச்சியை தெரிந்துகொள்ள முடிகிறது. காஞ்சிரம்பேட்டை தாண்டி சத்திரப்பட்டி கடவூர் என பைக் சீரான வேகத்தில் கடந்துகொண்டு இருந்தது. சத்திரப்பட்டியும், கடவூரும் மதுரைக்கு அருகில் இருந்தாலும் இன்னும் கிராமத்தின் சாயலிலேயே இருக்கின்றது, செல்லும் பாதை இருபுறமும் மாமரங்கள் கண்களுக்கு குளிர்சியை தந்தது,  
             பெரியார்பாசன கால்வாய் வறண்டு காணப்பட்டது என்றாலும் கரையோரம் பசுமையாகவே மரங்கள் காணப்பட்டது, கடவூர் தாண்டி பாலமேடு செல்லும் பாதைக்கு திரும்பினார், நான் எந்த இடம் செல்கிறோம் சார் என்றாலும் தலைமட்டுமே ஆட்டினார், பாலமேடு பாதையில் சென்று சிறிது தூரம் கடந்தபின் வலதுபக்க காட்டுபாதைக்குள் வண்டி சிறிது தூரம் சென்று பெரியகுளக்கரையில் வண்டியை நிறுத்தினார், இந்த இடம்தான் நண்பா என்றார்,
          ஒரு நடுத்தரகுளம் குளக்கரையில் நாலுபக்கமும் ஆழமரம், குளத்தில் தண்ணீர் இருந்தது, சுற்றிலும் மலை சார்ந்த காடு என அந்த இடம் அழகாய் இருந்தது என்றாலும் இந்த இடம் என்ன சிறப்புசார் என்றேன், இந்த குளம் இதுவரை வற்றியதில்லை காரணம் இந்த குளம் ஊற்றுதண்ணீரால் ஆனது என குளத்தின் அருகில் உள்ளகிணறு போன்ற ஒரு பள்ளத்தை காட்டினார் பள்ளத்தை சுற்றி கற்களால் தடுப்புசுவர் போல் எழுப்பியுள்ளனர் தண்ணீர் அதிமாகவே ஊற்றாகி வாய்கால்போல் குளத்தில் போய் சேர்கிறது, இந்த இடத்திற்கு "கல்லூற்று ஊரணி " என பெயர் என்றார் நாங்கள் சென்றபோது மணி மதியம் 1மணி அந்த நேரத்தில் குளத்தில் சிலர் குளித்துகொண்டு இருந்தனர்,

    ஆழமர நிழல் தண்ணீரில் விழ அங்கு குளிப்பது ஆனந்தம் தான் டைவ் அடித்து குளித்ததை பார்க்கும் போது நமக்கும் குளிக்கவேண்டும் என ஆசைவந்தது, துண்டு கொண்டுவந்திருந்தால் நாமும் குளித்து இருக்கலாம். சிறுது நேரம் இருந்துவிட்டு மதுரை கிளம்பினோம். அர்ஷியா வீடு சென்று அவரது நூலகத்தில் இருந்து புத்தகம் ஒன்று எடுத்துகொண்டு விருதுநகர் திரும்பினேன்

.

6 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆறுமாத்திற்கு ஒரு முறையாவது அந்த ஊரணியைப் பார்க்கப் போய்விடுவேன். இந்தமுறை பயணம் வேல்முருகனுடன் அமைந்துவிட்டது. மதுரையை இன்னும் நான் பெரியதொரு கிராமமாகத்தான் பார்க்கிறேன். என்ன பெரியபெரியக் கட்டிடங்கள் நிறைந்த கிராமம். அவ்வளவுதான்.

    கல்லூரணியிலிருந்து இன்னும் கொஞ்சந்தூரம் போயிருந்தால் அருமையான மலை ஏரி ஒன்றைக் கண்டுகளித்திருக்கலாம். வெளியாட்களின் காலடித்தடம் பதியாத ஏரி. நேரம் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. அர்ஷியா அவர்களுக்கு வணக்கம், அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக போவோம் சார்.

    பதிலளிநீக்கு
  4. மதுரையை இன்னும் நான் பெரியதொரு கிராமமாகத்தான் பார்க்கிறேன். என்ன பெரியபெரியக் கட்டிடங்கள் நிறைந்த கிராமம். அவ்வளவுதான்.// அர்ஷியா அவர்கள் சொல்லும் வரிகள் மிகவும் உண்மை.
    நானும் இந்தப் பக்கம் போயிருக்கிறேன். இந்த ஊரணியைப் பார்த்ததில்லை. அடுத்தமுறை செல்ல வேண்டும். நானும் நண்பரும் பாலமேடு, சாத்தியார் அணை, பாலமேடு வழி நத்தம் செல்லும் பாதை என சுற்றுவோம். நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி, சித்திரவீதிக்காரருக்கு வணக்கம், அடுத்த முறை சென்றுவாருங்கள் மறக்கமுடியாத இடம்.

    பதிலளிநீக்கு