செவ்வாய், பிப்ரவரி 26, 2013

பசுமை நடை பயணம் [கிரீன் வாக்]

 

                  கிரீன் வாக் 20 வரும் 24.2.13 காலை திருப்பரங்குன்றம் என அ.முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து sms தகவல் ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிட்டது. இந்தமுறை விருதுநகரில் இருந்துஅதிக நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என, வேலைபார்க்கும் நண்பர்கள், வெளிவட்டார நண்பர்கள் என பலரிடம் தகவல் கூற பலர் வருவதாக கூற எண்ணிக்கை 15 ஆனது. உடன் நண்பர் அ.முதுகிருஷ்ணன் அவர்களுககு இந்தமுறை 10 பேர் கலந்து கொள்வோம் என தகவல் கூறினேன்,ஆனால் 22ம் தேதி மாலை வருவதாக கூறிய நணபர்களுக்கு தகவல் கேட்ட போது அப்புறம் பார்க்கலாம் என கூற 15 எண்ணிக்கை என்னை சேர்த்து 4 ஆகி போனது,சிலர் போனை எடுக்கவே இல்லை,சரி இரண்டு பைக்கில் கிளம்புவோம் என முடிவு செய்தோம்.
          சனிகிழமை மாலை நண்பர் விமலன் நான் குடும்பத்துடன் 3பேர் கலந்து கொள்வதாக தகவல் கூறினார், அப்புறம் இரவு 7 மணிக்கு மேலும் இரண்டு பேர் குழந்தைகளுடன் வருவதாக போன் செய்ய எண்ணிக்கை 13 ஆனது.ஒரு கார் ,3பைக் என 24.2.13 ஞாயிற்றுகிழமை காலை 5.30 மணிக்கு புறப்பட்டோம்.
          அதிகாலை பனி காரணமாக பைக்கில் செல்வது கஷ்டமாக இருந்தது, திருப்பரங்குன்றம் அடைந்தபோது 6.40 மணி எங்களுக்கு முன்பே அ.முத்துகிருஷ்ணன் மற்றும் சில நண்பர்கள் அங்கு இருந்தனர்.[பேரா.சாத்தலிங்கம் ஐயா, பேரா.ரத்தினகுமார், பேரா.பெரியசாமிராஜா] வா நண்பா என அ.அர்ஷியா எங்களை வரவேற்றார்,மேலும் சிலர் வர சுமார் 80 பேர் மலைஏறினோம்

 

                     ஏற்கனவே ஒருமுறை இந்தமலையின் மேற்குபகுதியில் உள்ள சமணர்குகைக்கு பசுமைநடை சென்றுயிருந்தாலும், இநத முறை மலை உச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள சமணர் கல்வெட்டுகளை காண பயணம் ஆரம்பம்மானது. மலையேரும் வாசல் வரை வீடுகள் இருந்தன, அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை கடந்தவுடன் கானகம் செல்லும் பாதை ஆரம்பித்துவிடுகிறது, மழையில்லாததால் மரங்கள் இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. மலையின் பாதை செங்குத்தாக இருந்ததால் மூச்சு வாங்கியது உட்கார்ந்து உட்கார்ந்து தான் சென்றோம்.
             
                     இந்த பாதை மத ஒற்றுமை பாதை என்றும் கூறலாம் காரணம் மலை உச்சியில் ஒருபக்கம் காசிகோவில் இன்னொறுபக்கம் சிக்கந்தர் தர்கா என இருப்பதால் மலைபாதையில் முக்கால்வாசிதூரம் இந்துக்களும் முஸ்லீம்கலும் ஒன்றாகவே மலை ஏறுகின்றனர். மலையின் கிழக்கு பகுதியில் இருந்து இந்துகோவிலுக்கு சிமென்ட் படிக்கட்டுட்களுடன் பாதை அமைக்கபட்டு இருந்தாலும் அந்த பாதையில் யாரும் வருவதில்லை சிலநேரங்களில் அந்த பாதையில் வழிபறிநடைபெறுகிறது. எனவே இந்த வடக்குபாதையை தான் அதிகம் பயன் படுத்துகின்றனர்.
              சிறிது தூரம் ஏறியபின் பெரும் பாறையுடன் கூடிய திட்டுகாணப்படுகிறது. அங்கிருந்து அந்த நேரத்தில் மதுரை நகரின் மொத்த அழகையும் பார்ப்பது அழகு, ஆனந்தம் ஏற்படுத்தும் பரவசம்தான். குழந்தைகள் ஓடிபிடித்து விளையாடினர், ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் அந்த நேரத்தில் ஏற்பட்ட சந்திப்பின் பயன்படுத்திகொண்டனர், அந்த இடத்தில் தர்காவுக்கு தனிபாதை பிரிந்தது. சிறிது தூரம் நடந்தோம், மலையின் கிழக்கு பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையுடன் இணைகிறது. மலைஏற பாதுகாப்புடன் சுவர்கள் எழுப்பப்பட்டு படிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏறுவது கடினமாக இருந்தது.
          உச்சியில் ஒருமண்டபம் ஓய்வு எடுக்க பெஞ்சுகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து தென்பகுதிகளை பார்த்தால் அற்புதகாட்சி, கீழே தென்குன்ற குடைவறை கோவில் வாசலில் உள்ள பார்க் மற்றும் வீடுகள் கண்மாய்கள் (தண்ணீர் குறைவாக) மற்றும் நிலையூர் ஊர் அழகாக காட்சியளித்தது. பாதையில் செல்லும் லாரிகள், பஸ்கள்,பைக் போன்றவை விளையாட்டு மொம்மைகளாக காட்சியளித்தது. திருப்பரங்குன்ற இரயில் நிலையத்தில் இருந்து நெல்லைநோக்கி சென்ற இரயில் அப்போதுதான் புறப்பட்டுகொண்டு இருந்தது. மேலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்த்தபோது குழந்தையின் மனநிலைக்கு எங்களைமாற்றிவிட்டது.

 
         
              அங்கிருந்து சிறிது இறக்கம் வலதுபக்கம் பாதுகாப்புசுவர், இடதுபக்கம் மேலேரும் நீண்ட பாறை இடையில் தண்ணீர்சுனை விழுந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்பாக இருந்தாலும் குரங்குகளால் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது வழிபறி திருடர்கள் போல் எங்களிடம் உள்ள பை, தண்ணீர்பாட்டிலை பிடிங்கிசென்றது, ஒரு குழந்தையிடம் தண்ணீர் பாட்டிலை பிடுங்க அது தரமறுக்க அங்கு ஒரு அலறல் போராட்டம் நடந்தது, நாங்கள் கம்பை எடுத்து விரட்டி சென்றாலும் பயம் அறியா குரங்காக இருந்தது.முடிவில் குரங்கு வெற்றிபெற்று பாட்டிலை பிடிங்கி சென்றது, சுவர் மீது உட்கார்ந்து பாட்டில் மூடியை திறக்க முயற்சித்து முடியாமல் கீழே போட்டுவிட்டது.
                  இன்னொறு குழந்தயிடம் கேன்பாக்கை பிடிங்கி ஜிப்பை திறந்து பிஸ்கட்பாக்கெட்டை எடுத்துகொண்டு பையை கீழே போட்டுவிட்டு நல்லவராய் நடந்துகொண்டது. இப்படி குரங்குகளின் தொல்லை அதிகம். கோவில் முன் இடதுபக்கம் சுனைக்கு மேல் செங்குத்தான உயரமான பாறை அதில் சமணமுனிவர்களின் இரண்டு அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்தகாலத்தில் கூட இந்த உயரத்தில் செதுக்குவது சிரமம் என எண்ணிபார்கையில் ஆச்சரியமாக இருந்தது.
        அதன் எதிரில் கலந்துகொண்டவர்கள் உட்கார போராசரியர். சாத்தலிங்கம் ஐயா அவர்கள் அந்த சிற்பங்களின் சிறப்பை அந்த பகுதி வரலாற்றை விளக்க மேலும் ஆச்சரிய தகவலாக இருந்தது, இன்று முருகன் கோவிலாக இருந்தாலும் திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் பாடல்களில் இது சிவன்கோவிலாக பாடல் பாடப்பட்டுள்ளதாக கூறி கோவில் அமைப்பை எடுத்துகூறினார்கள். இந்த மலைக்கு மேல் உள்ள சிக்கந்தர் தர்கா பற்றியும் கூறினார்கள், கோவில் பின்புறம் உள்ள இயற்கை குளம் மற்றும் அந்த இடத்தின் அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது, பார்த்து உணர்ந்தால்மட்டுமே முடியும்.
     
      அழகை உண்ட மயக்கத்தில் மலையின் கீழே இறங்கினோம். எஸ்.அர்ஷியா அவர்கள் தன் அப்பாஷ்பாய் தோப்பு நாவலில் சிக்கந்தர் தர்கா பற்றி குறிப்பிட்டு இருப்பார், அதைபடிப்பவர்கள் அங்கு இரவு தங்கி இருந்த உணர்வை பெறுவார்கள், தர்கா பற்றி உண்மை வரலாற்றை அறிய அடுத்தமுறை அங்கு ஓர் பசுமைநடை போடவேண்டும் என அ.முத்துகிருஷ்ணன் கூறினார்கள், பேசிக்கொண்டும் அங்கிருந்த படி மதுரை அழகை ரசித்துக்கொண்டும்,கீழே அடிவாரத்திற்கு வந்தோம்,
           நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தவர்கள் காலை உணவு வழங்க மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பசுமைநடையின் பசுமையான நிணைவுகளுடன் வீடு திரும்பினோம்


.

சனி, பிப்ரவரி 16, 2013

இலக்கியவாதிகள் சந்திப்பு 2


         கடந்த வாரம் அம்மாவை பார்க்க திருமங்கலம் சென்றேன். அப்படியே எழுத்தாளர் நண்பர் திரு.ஷாஜஹான் அவர்களை பார்க்கலாம் என போன் செய்தபோது என்ன வேல்முருகன் ஆளையே காணாம் வாருங்கள் வீட்டில் தான் உள்ளேன் என கூற அவரை பார்க்க சென்றேன். அவரை சந்தித்தபோது நான் வெகு நாட்களுக்கு முன்கேட்ட வண்ணநிலவன் எழுதிய ”கடல்புறத்திலே” நாவல் மற்றும் நான் கேட்காத ”கம்பா நதி” நாவலையும் சேர்த்து தந்தார், சென்னை புத்தககண்காட்சிகு சென்றபோது உங்களுக்கா வாங்கினேன் என்றார்.
          மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மற்றும் பல விஷயங்களை பற்றி பேசினோம். நண்பர் அர்ஷியா,மற்றும் முத்துகிருஷ்ணன் அவர்களை பார்தீர்களா என கேட்டார், மதுரை சென்று வெகு நாள் ஆகிவிட்டது என சொன்னேன்,, திருநகர் போவோம் என உடன் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு போன் போட்டார், அவர் வேறு நிகழ்வில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது எழுத்தாளர்.பெருமாள்முருகன் திருமங்கலம் வந்துள்ளதாக உடன் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு போனோம்.
          அதற்கு முன் இரண்டு விஷயங்களை கூற வேண்டும் நான் முதன் முதலில் சந்திக்க சென்ற அர்ஷியா மற்றும் கவிஞர்.சாம்ராஜ்(தனிதனியாக சந்தித்த நாளில்) அவர்கள் வீடுகளுக்கு போன போது முன்பின் அறிமுகம் ஆகாத நிலையிலும் வெகு நாள் பழகிய நண்பர்களை போல் பேசினார்கள் விடைபெற்று போகும் போது அவர்கள் பொகிஷமாக வைத்து இருந்த புத்தகங்களை படிக்க தந்தார்கள். நானே இப்படி தந்ததில்லை,ஆச்சரியமாக இருந்தது.

 
         அதேபோல் தான் ஷாஜஹான் அவர்களும், இவர் கவிஞர்,நாவலாசிரியர்,மொழிபெயர்ப்பாளர். என்விகடனில் ”எனது ஊர் திருமங்கலம்” என கட்டுரை எழுதியுள்ளார். வீடு முழுவதும் புத்தகம் புத்தகம் தான் இவர் நல்ல விமர்சகர் இவரை பற்றி எழுத்தாளர்களுக்கு தெரியும். இவரை மொழிபெயர்புக்கு பதிப்பகங்கள் பயன்படுத்திகொண்டால் பல அறிய நூல்கள் தமிழுக்கு கிடைக்கும்.
           பெருமாள்முருகன் இருவரையும் வரவேற்றார். நான் அவரை இப்போது தான் சந்திக்கின்றேன்.இருவரும் தமிழ் இலக்கிய போக்கு பற்றியும், பதிப்பகங்கள் பற்றியும் பேசினார்கள், நான் பார்வையாளனாக அமர்ந்து கேட்டுகொண்டு இருந்தேன்,இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை, அன்றைய நாள் மறக்கமுடியாத நாளாக என் மனதில் பதிந்துபோனது.