சனி, மார்ச் 29, 2014

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா


    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா…..
      





      இந்த வருடம் மார்ச் மாதம் 15, 16 ம் தேதிகளில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை நடை பெறும் இந்த இரண்டு நாள் விழாவில் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள், இலங்கையை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

    1974 ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய கட்டுபாட்டில் இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இலங்கை அர்சு கட்டுபாட்டில் கச்சதீவு இருந்தாலும் மார்ச் மாதம் நடைபுறும் புனித அந்தோணியார் திருவிழாவுக்கு இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 1983 ல் இலங்கையில் நடைபெற்ற  இனகலவரத்திற்கு பின் விழா நடைபெறவில்லை. 2011 ம் ஆண்டு முதல் மீண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வருட கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் மதுரை பசுமைநடை குழுவின் சார்பில் 10 பேர் கலந்துகொண்டதில் நானும் ஒருவன்.
   
     விழா நடைபெறும் 20 தினங்களுக்கு முன்பே இராமேஸ்வரம் திருச்சபை யில் விழாவில் கலந்துகொள்ள விண்னப்பம் தந்து அனுமதிபெறவேண்டும். இந்த ஆண்டு 3432 பேர் விண்ணப்பம் தந்து 3160 பேர் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 2466 பேர், பெண்கள்- 528 பேர், சிறுவர்கள்- 166 பேர்,

   அனுமதிக்கப்பட்டவர்கள் 15.3.2014 சனிக்கிழமை காலை 6 மணிக்கு இராமேஸ்வரம் படகு துறைக்கு வந்துவிட்டோம். கலந்துகொள்பவர்கள் 40 பேர் என தனி தனி குழுவாக பிரித்து அவர்களுக்கு படகுகள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.  
    மொத்தம் 96 படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன, எங்கள் குழுவினர்க்கு 84 ம் எண் படகு ஒதுக்கப்படுயிருந்தன, நாங்கள் ஒரே குழுவாக இருந்ததால் மொத்தமாக செக் செய்து கொண்டு செல்லும் தங்கநகை, கேமிரா, பணம் என்ன என்பதை ஒரு விண்ணப்பத்தில் பூர்த்திசெய்து தந்தபின் படகில் செல்லும் போது அணியும் ;லைப்ஜாகெட் தருகின்றனர், அதன் பின்  காவல்துறையினர் நாம் கொண்டு செல்லும் பைகளை முழுமையாக செக்செய்து தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் எடுத்து வைத்துகொள்கின்றனர்.

     காவல்துறைக்கு அடுத்து சுங்கதுறையினர் மீண்டும் நமது அடையாள அட்டை செக்செய்து நமது முகமும் அடையாள அட்டை புகைபடமும் சரியாக உள்ளதா என கவணித்து அதன் பின் நமது உடமைகளை தீவிர சோதனை செய்த பின் படகு ஏற அனுமதிக்கின்றனர். இந்த சோதனை முடிந்து படகில் ஏறவே மூன்று மணி நேரம் ஆனது.
     
    அதில் 1.30 நிமிடம் வெயிலில் நிற்கவேண்டி இருந்தது போதிய வசதி செய்யப்படவில்லை, படகில் ஏறும்போது தமிழக அரசு அதிகாரிகள் நம் பெயரை செக்கெய்து படகில் ஏற்றுகின்றனர், 36 பேர் படகில் ஏறியபின் படகு புறப்பட்ட போது மணி மதியம் 12.15 ஆனது, படகில் எத்தனை பேர் ஏறுகிறோமோ அதே நபர்கள் தான் வரவேண்டும் ஒரு நபர் குறைந்தாலும் திருப்பும்போது உள்வர அனுமதி இல்லை என எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர்.








    எங்கள் குழுவில் உள்ள 36 பேரில் 28 பேர் முதல் முறையாக கச்சதீவு பயணம் செய்கின்றோம். படகு செல்ல செல்ல இராமேஸ்வரம் எங்கள் கண்ணில் இருந்து மறைந்துகொண்டு இருந்தது, சுமார் 1 மணி நேரம் பயணம் செய்தபின் எங்களை சுற்றியும் கடல் மட்டுமே கரையே தெரியவில்லை திசையும் அறிய முடியவில்லை, இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு 18 மைல் ,ஒவ்வொரு 3 கிமீ க்கும் இடையில் தமிழகமரைன் காவல்படை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை என நம் படகை நிறுத்தி செக்செய்கின்றனர், கச்சத்தீவு அருகில் இலங்கை கடற்படையினர் ஆய்வுக்கு பின் நம்படகை கச்சதீவுக்குள் அனுமதிக்கின்றனர்.
  
    நாங்கள் சென்ற படகு நடுக்கடலில் சென்று கொண்டு இருக்கும் போதே இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நின்று விட்டது, இன்சின் டெலிவரி வால்வில் கடற்பாசி அடைத்துகொண்டதே காரணம் அதை சரி செய்ய 10 நிமிடம் ஆனது, அந்த பத்து நிமிடம் படகு ஆடிய ஆட்டம் எங்கே படகுகவிந்து விடுமோ என பயந்துவிட்டோம், படகு ஆடிய ஆட்டத்தில் சிறுகுடல் தொண்டைக்கு வந்து சென்றது, படகு சரி செய்து புறப்பட்ட பின்னரே உயிர் திரும்பி வந்தது, உச்சி வெயிலும், படகு முழுவதும் கவுச்சி நாற்றமும் வாந்தி வரும் படி செய்தாலும் படகில் இருந்து கரையில் இறங்கிய பின்னரே வாந்தி எடுத்தேன். வாந்தி எடுத்த பின்னரே தலைவலி குறைந்தது.
         
    கச்சதீவில் படகில் இருந்து இறங்க தற்காலிக மிதக்கும் படகு துறை ஏற்பாடு செய்து இருந்தனர்.   கச்சதீவு பற்றி தினம் ஒரு செய்தியாக செய்தி தாள்களில் படித்து வந்த நான் இன்று கச்சதீவில் நிற்கின்றேன் என நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது, 15 தினத்திற்கு முன் கச்சதீவு பற்றியே எண்ணவில்லை.
    
    கடற்கரை பகுதியிலேயே இலங்கை அரசு செக்போஸ்ட் அமைத்து இருந்தனர், இந்தியாவில் இருந்து வருபவர்களும், இலங்கையில் இருந்து வருபவர்களும்  அந்த செக்போஸ் கடந்தே உள்செல்ல வேண்டும் ஆனால் இலங்கை அரசு எவ்விதகெடுபிடியும் செய்யாமல் அனுமதிக்கின்றனர், பக்தர்கள் கச்சதீவின் மேற்கு கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயம் செல்லவேண்டும், செல்லுவதற்கு பாதை ஏற்படுத்தி மின் வசதியும் செய்து இருந்தனர்.
  
    மரங்களின் கீழ் உள்ள புற்களை அகற்றி பக்தர்கள் தங்கிகொள்கின்றனர், நாங்களும் ஒரு பெரிய மரத்தின் கீழ் இடத்தை சுத்தம் செய்து பெரிய பிளாஸ்டிக் பாய் விரித்து தங்கினோம், இந்திய விழாவை போன்று சிறுசிறு கடைகள் அங்கு இருந்தன , டீ கடையும் இருந்தது ஒரு டீ 20 ரூபாய் நமது பணத்தை வாங்கிகொள்கின்றனர், மேலும் இலங்கை வங்கி ஒன்றும் தற்காலிகமாக முகாம் இட்டு நமது பணத்தை பெற்று கொண்டு இலங்கை பணம் தருகின்றனர், பலர் இலங்கை பணமாக பெற்றுக்கொண்டாரகள். நமது ரூபாய் மதிப்பில் இரட்டிபாக தருகின்றனர், நம் இந்திய மதிப்பில் ஒரு டீ 20 ரூபாய் எனில் இலங்கை மதிப்பில் டீ 40 ரூபாய் என விற்கின்றனர்.
  

    இந்தியாவில் இருந்து வரும் பகதர்கள் தவிர இலங்கையில் இருந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் படகில் வந்துகொண்டே இருந்தனர்,

    மாலை 5 மணிக்கு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கியது, முதல் நிகழ்வாக சிலுவைப்பாதை திருப்பலிபூசை நடந்தது, ஒரு பெரிய மரசிலுவையை பக்தர்கள் சுமந்துவர காவிலை சுற்றியுள்ள மைதானத்தை சுற்றி வருகின்றனர் சுமார் 2 மணிநேரம் விழா நடந்தது, அந்த நேரத்தில் கடற்கரையில் பொளர்னமிநிலா வெளிச்சத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து அழகை ரசிப்பது  எவ்வளவு ஆனந்தம்.

    கடற்கரை முழுவதும் இலங்கை கொடி தான் பறக்கவிட்டுள்ளனர். சில நண்பர்கள் கடற்கரை மணலில் படுத்துகொண்டணர். குளிர் அதிகம் இருந்ததால் நான் மரத்தின் கீழ் வந்து படுத்துக்கொண்டோம்.




ராஜண்ணாவுடன்

சரவணன், கியூபட் அந்தோணி,  அ.முத்துகிருஷ்ணன், வேல்முருகன். இபி.ராஜ் இவர்களுடன் ராஜண்ணா[பின்பக்கம்]








தங்க இடம் ஏற்பாடு ஆயுத்தம்

தலைப்பைச் சேருங்கள்

செடிகளை ஒதுக்கிய பின் 

  காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்துவிட்டோம், கடற்கரையில் வந்து குளித்திவிட்டு தெற்கு பகுதிக்கு நடந்து சென்றோம், அங்கு ஓர் இராணுவ கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது, அதில் இருந்துதான் கச்சதீவு முழுவதும் தண்ணீர் சப்ளை செய்வதை பார்க்கமுடிந்தது. அதை பார்த்தவாரே தெற்கு பகுதிக்கு சென்றோம் , அங்கு பெரிய பாறைகள் நிறைந்து காணப்பட்டது, அவ்வளவும் பவள பாறைகள், அங்கு காணப்பட்ட அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாத அழகு, அந்த பகுதியில் ஓர் முற்றிலும் பாழடைந்த ஓர் கோவிலையையும் கண்டோம். 
      பின் மீண்டும் கோவில் திடலுக்கு திரும்பினோம் காலை  8 மணிக்கு மீண்டும் சிறப்பி திருப்பலி பூசை தொடங்கியது, அதன் பின் தேர்பவணி வந்தது, காலை 10 மணிக்கு கொடியிற்றக்கத்திற்க்கு பின் விழா நிறைவு பெற மக்கள் கூட்டம் கச்சத்தீவின் மேற்குகடற்கரைக்கு புறப்பட்டனர்,
    \]
      மேற்கு கடற்கரை முழுவதும் மனித தலைதான் , அவர் அவர் படகு குழுவை தேடி அலைந்து கொண்டிருந்தனர், காலை 10 மணிக்கு முதல்படகு வர பகதர்கள் ஏறி இந்தியா புறப்பட்டோம், எங்களது படகு 5 வதாக வந்ததால் 10.30 க்கு கச்சத்தீவை விட்டு புறப்பட்டோம்,
  
     இராமேஸ்வரம் வந்தடைந்த போது மதியம் 12 மணி, நாங்கள் இறங்கிய பின் சுக்கதுறையினர் படகு முழுவதும் சோதனை செய்கின்றனர், அதன் பின் மீண்டும் எங்கள் உடமை, அடையாள அட்டை செக்செய்து பின் வெளியேற அனுமதிக்கின்றனர்,

   
       ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மட்டும்மல்லாது யாருக்கும் எளிதில் கிடைக்காத கச்சதீவு அனுபவமாக அமைந்துபோனது, மீண்டும் அடுத்த வருடமும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் விருதுநகர் திரும்பினேன்.
    
    என்னுடன் கச்சதீவு பயணத்தில் கலந்துகொண்டவர்கள்
             அ,முத்துகிருஷ்ணன்
             சோபியா
             ராஜண்ணா
             சரவணன்
             கியூபட் அந்தோணி
             மதுமலரன்
             சதீஸ்
             அருண்பாஸ்
             இபி.ராஜ்
             வக்கில் ராபர்ட் குடும்பத்தினர்
              வக்கில் அருண் மற்றும் அவரது நண்பர்கள்
             















































       






நாங்கள் சென்ற படகின் ஓட்டுனரும், படகு ஓனரும்





படங்கள் உதவி.அருண்பாஸ்