புதன், மார்ச் 12, 2014

மதுரை “ பேஷன் ஷோ” 2014



       மதுரையில் முதன் முறையாக ஒரு பிரமாண்டமான  ” பேஷன் ஷோ ” 9.3.2014 ஞாயிற்றுகிழமை மாலை ‘ சேம்பர் ஆப் காமர்ஸ்” அரங்கில் நடந்தது. மதுரை dream zone   இன்ஸ்டியூட் நடத்திய பேஷன் ஷோ பெங்களூர் மாடல்கள் கலந்து கொண்டனர். அதில் 15 மாணவர்கள் ஆடை வடிவமைப்பாளராக கலந்து கொண்டதில் எனது மகளும் ஒருவர். எனவே நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பார்வையாளராக கலந்துகொண்டேன்.

     பேஷன் ஷோ ஒரு கலாச்சார சீர்கேடு என மதவாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதை செய்திதாள்களில் செய்தியாக படித்துள்ளேன், எனவே சற்று தயக்கத்துடன் தான் கலந்து கொண்டேன், ஆனால் ஷோவை பார்த்த பின்னர் அது பொய் என்பதையும், இது ஆடைவடிவமைப்பாளர்களின் ஆடை வடிவத்திற்கு மாடல்கள் உயிர் கொடுக்கும் நிகழ்வாக பேஷன் ஷோ தெரிந்தது.

     ஷோ 5 மணிக்கு என்றதால் 5.30 க்கு அரங்கிற்கு சென்ற போது மிக குறைவாக பார்வையாளர்கள் வந்துயிருந்தனர். ஷோ 6.30 மணிக்கு ஆரம்பித்த போது அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பி இருந்தனர்.
      மதுரையில் உள்ள பிரபலமானவர்களோ, அரசியல் தலைவர்களோ சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படாததால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரங்குநிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது.

     15 ஆடைவடிவமைப்பாளர்கள் [ வயது 20 க்குள் தான் இருக்கும்] ஒவ்வோருவரும் 5 உடைகள் டிசைன் என 75 ஆடைகள் தயாரித்து இருந்தனர்,
     ஒரு சுற்றுக்கு பதினைந்து மாடல்கள் என மொத்தம் ஐந்து சுற்று RAMP WALK நடந்தது, ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்கவர் நடனம் நடைபெற்றது, சிறந்த நடனகுழுவுக்கு பரிசுகளும் வழங்கினர், மேலும் பார்வையாளர்களுக்கும் சிறுசிறு போட்டி வைத்து பரிசுகளும் உடனுக்கு உடன் வழங்கினர். நிகழ்ச்சி நடந்த மூன்று மணிநேரமும் விறு விறுப்பாக சென்றது.

      ஆடைவடிவமைப்பாளர்களின் முதல் கனவை உயிர் கொடுக்க மாடல்கள் ஒவ்வொருவராக மேடையில் நடந்து வந்தனர் , மயில் போல் நடந்து வந்து ஆடைகளின் நுணுக்கத்தை அழகாக வெளிப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல் இசையும் , வண்ணவிளக்குகளும் பின்னனியில் சிறப்பு செய்தது.
        ஒருவர் ஒருவராக வந்து மேடையில் வலம் வந்தது அழகாக இருந்தது, அதன் பின் மொத்தமாக 15 மாடல்களும் மேடையில் அணிவகுத்து சுற்றி வந்து, வலம், இடம் என மாறிமாறி பிரிந்து நடந்து மேடையின் பின்புறம் சென்றதை பார்க்கும் போது ஒரு இராணுவ அணிவகுப்பை போல் கட்டுகோப்பாக இருந்தது. பார்க்கும் போது பிரமிப்பை தந்தது.

      மொத்தம் ஐந்து RAMP WALK நடந்தது, ஒவ்வொரு    WALK ம் வேறுவேறு  வித்தியாசமாக இருந்தது, முதல்   RAMP WALK    ல் மாடல்கள் தனி தனியாக வந்தனர், 2 வது  RAMP WALK  ல் இரண்டு பேர், அடுத்தது மூன்று பேர் என மாடல்கள்  மேடையில் தோன்றினர், ஒவ்வொரு முறையும் மேடையில் வளம் வந்து உடையின் அமைப்பையும் , நுனுக்கத்தை  பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக உடைக்கு ஏற்ப மாடல்கள்  RAMP WALK செய்தனர்.அதில் துளியும் ஆபாசம் ஏதுமில்லை என்பது மட்டும் உண்மை.
   மாடல்கள் முகத்தில் புன்னகையுடன் , ஒரு ராணுவ வீரர் போன்று மிடுக்குடன் மேடையில் RAMP WALK செய்தது பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.  மொத்தத்தில் டிசைனர் செய்த ஆடைகளுக்கு மாடல்கள் உயிர் தந்தனர் என்றே சொல்லவேண்டும்.


    மாடல்களை  வழிநடத்தும் நிர்வாகி  நிகழ்வின் முடிவில், நாங்கள் மும்பை, டில்லி, பெங்களூர், சென்னை என முக்கிய நகரங்களில் பிரபலமான  பேஷன் டிசைனர் செய்த உடைகளுக்கு ஷோ செய்துள்ளோம். முதல் முறையாக மதுரை வந்துள்ளோம்,   வரும் போது சந்தேகத்துடன் வந்தோம் ஆனால்   DREAM ZONE இன்ஸ்டியூட் டிசைனர் திறமையை நேரில் கண்ட போது ஆச்சரியம் அடைந்தோம், மிகமிக அழகாக ஆடைகளை டிசைன் செய்துள்ளனர், இதில் எங்கள் மாடல்கள் பங்கேற்றது பெருமையாக உள்ளது என்றார்.

     ஆம் அது முற்றிலும் உண்மை 15 டிசைனர் செய்த எழுபத்தைந்து ஆடைகளும் மிக மிக நேர்த்தியாக இருந்ததால்  முதல் பரிசு, இரண்டாம் பரிசு என பிரிக்காமல் 15 பேஷன் டிசைனருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தது பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

   ஒவ்வொரு  RAMP WALK  க்கும் 15 நிமிடம் இடைவேளை அந்த 15 நிமிடத்தில் புதிய உடை உடுத்தி அதற்கு ஏற்றார்போல் அணிகலன் மற்றும் மேக்கப் செய்து மேடையில் தோன்றினர், பெண்கள் மேக்கப் செய்ய அதிக நேரம் எடுத்துகொள்ளவார்கள் என்பதை மாடலகள் பொய்யாக்கினர்.அவ்வளவு வேகம்....

     மாடல்களுக்கு உடை அணிந்து மாடல்கள் தங்கள் உடையை அணிந்து வளம் வருவதை,  டிசைனர் பார்க்க அவர்களுக்கு மேடையின் முன்புறம் சீட் ஒதுக்கவில்லை, அவர்கள் கதவு ஓரத்தில் ஒருவர் மீதி ஒருவர் இடித்த படி நிகழ்ச்சியை பார்த்தனர், வாலண்டியர்கள் அந்த இடத்தில் நின்றுகொண்டதால் டிசைனர் சிரமப்பட்டனர்.

   மேலும் டிசைனர் குடும்பத்தினர் டிக்கட் வாங்கி வரவேண்டும் என கூறிவிட்டனர், என் குடும்பத்தினருக்கு அரங்கின் கடைசியில் சீட் ஒதுக்கப்பட்டதால், நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்க்க முடியாமல் போனது, இரண்டாவது, மூன்றாவது வரிசையில் சீட் ஒதுக்கி இருந்தால் பெற்றோர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்.

        மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அருமையாக தம் பணியை செய்தார், ஒளி ஒலி சிறப்பாக இருந்தது,     RAMP WALK   ன் போது ஒலித்த இசை மிக அருமை.
      மொத்தத்தில் பார்வையாளர்களுக்கும், ஆடைவடிவமைப்பாளர்களுக்கும் மறக்கமுடியாத பேஷன் ஷோ .      

         













      

3 கருத்துகள்:

  1. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு நிகழ்வு,நல்லதொரு நிகழ்ச்சித்தொகுப்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு