சனி, பிப்ரவரி 16, 2013

இலக்கியவாதிகள் சந்திப்பு 2


         கடந்த வாரம் அம்மாவை பார்க்க திருமங்கலம் சென்றேன். அப்படியே எழுத்தாளர் நண்பர் திரு.ஷாஜஹான் அவர்களை பார்க்கலாம் என போன் செய்தபோது என்ன வேல்முருகன் ஆளையே காணாம் வாருங்கள் வீட்டில் தான் உள்ளேன் என கூற அவரை பார்க்க சென்றேன். அவரை சந்தித்தபோது நான் வெகு நாட்களுக்கு முன்கேட்ட வண்ணநிலவன் எழுதிய ”கடல்புறத்திலே” நாவல் மற்றும் நான் கேட்காத ”கம்பா நதி” நாவலையும் சேர்த்து தந்தார், சென்னை புத்தககண்காட்சிகு சென்றபோது உங்களுக்கா வாங்கினேன் என்றார்.
          மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மற்றும் பல விஷயங்களை பற்றி பேசினோம். நண்பர் அர்ஷியா,மற்றும் முத்துகிருஷ்ணன் அவர்களை பார்தீர்களா என கேட்டார், மதுரை சென்று வெகு நாள் ஆகிவிட்டது என சொன்னேன்,, திருநகர் போவோம் என உடன் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு போன் போட்டார், அவர் வேறு நிகழ்வில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது எழுத்தாளர்.பெருமாள்முருகன் திருமங்கலம் வந்துள்ளதாக உடன் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு போனோம்.
          அதற்கு முன் இரண்டு விஷயங்களை கூற வேண்டும் நான் முதன் முதலில் சந்திக்க சென்ற அர்ஷியா மற்றும் கவிஞர்.சாம்ராஜ்(தனிதனியாக சந்தித்த நாளில்) அவர்கள் வீடுகளுக்கு போன போது முன்பின் அறிமுகம் ஆகாத நிலையிலும் வெகு நாள் பழகிய நண்பர்களை போல் பேசினார்கள் விடைபெற்று போகும் போது அவர்கள் பொகிஷமாக வைத்து இருந்த புத்தகங்களை படிக்க தந்தார்கள். நானே இப்படி தந்ததில்லை,ஆச்சரியமாக இருந்தது.

 
         அதேபோல் தான் ஷாஜஹான் அவர்களும், இவர் கவிஞர்,நாவலாசிரியர்,மொழிபெயர்ப்பாளர். என்விகடனில் ”எனது ஊர் திருமங்கலம்” என கட்டுரை எழுதியுள்ளார். வீடு முழுவதும் புத்தகம் புத்தகம் தான் இவர் நல்ல விமர்சகர் இவரை பற்றி எழுத்தாளர்களுக்கு தெரியும். இவரை மொழிபெயர்புக்கு பதிப்பகங்கள் பயன்படுத்திகொண்டால் பல அறிய நூல்கள் தமிழுக்கு கிடைக்கும்.
           பெருமாள்முருகன் இருவரையும் வரவேற்றார். நான் அவரை இப்போது தான் சந்திக்கின்றேன்.இருவரும் தமிழ் இலக்கிய போக்கு பற்றியும், பதிப்பகங்கள் பற்றியும் பேசினார்கள், நான் பார்வையாளனாக அமர்ந்து கேட்டுகொண்டு இருந்தேன்,இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை, அன்றைய நாள் மறக்கமுடியாத நாளாக என் மனதில் பதிந்துபோனது.

2 கருத்துகள்:

  1. நதிகள் இரண்டு பரஸ்பரம் தாகம் தீர்த்துக்கொள்கிற போது ரம்யம் மிகும் என சொல்வார்கள்.அதுதான் உங்களது விஷயத்திலும் நடந்துள்ளது போலும்.

    பதிலளிநீக்கு