செவ்வாய், ஜனவரி 29, 2013

'தவம் கலையும் காலம்' ஆய்வுநூல்


       நண்பரும், பேராசிரியரும்மான முனைவர்.த.கண்ணா கருப்பையா அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுநூல் 'தவம் கலையும் காலம்' இன்றைய தமிழ் பேராசிரியர்கள் பலர் இன்றைய இலக்கியங்களில் கவனம் செலுத்தாத நிலையில், இன்றைய இலக்கியவாதிகள் நூல்களையும், ஏற்கனவே இலக்கிய உலகில் வளம் வந்து பிறரால் மறக்கப்பட்ட இலக்கியவாதிகள் பற்றியும் படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

               எஸ்.அர்ஷியாவின் "பொய்கைக்கரைப்பட்டி" நாவல், பாண்டியகண்ணனின்  'சலவான்' நாவல் ( விருதுநகரில் நடந்த உண்மை சம்பவம், மறைக்கப்பட்ட நிகழ்வுகள் நாவலாக்கப்பட்டுள்ளது), கீரனூர் ஜாகீர்ராஜாவின் மீன்குகை வாசிகள் மற்றும் வடக்கே முறி அலிமா நாவல்கள் பற்றியும், அரவாணிகளின் உண்மை முகத்தை காட்டும் அவன்- அவள்- அது, " மூன்றாம் பாலின் முகம்" நாவல்கள் பற்றியும் நாம் படித்து இருந்தாலும், அதில் உள்ள அதில் உள்ள கருத்தின் ஆழத்தை கட்டுரை மூலம் நமக்கு உணர்த்தி மீண்டும் அந்த நாவல்களை வாசிக்க தூண்டும் நிலையை ஏற்படுத்துகிறார்.
       
        குயிலன் பற்றியும், ரா.சிதம்பரம் அவர்களை பற்றிய கட்டுரைகள் படிக்கும் போது மறக்கப்பட்ட. மறைக்கப்பட்ட இரண்டு உன்னத இலக்கியவாதிகளை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. ரா.சிதம்பரத்தின் சிறுகதைகள் இப்போது கிடைக்குமா என தெரியவில்லை. நாவல்கள் திரைப்படமாக்கப்பட்ட பட்டியலும், அவைகள் படமாக்கப்பட்டபோது நடத்த நிகழ்வுகளையும் கட்டுரைகள் படிக்கும் போது அறிந்து கொள்ளமுடிகிறது.
\          ஆய்வுகட்டுரைகள் கல்லூரிகளில் சமர்க்கிப்படும் போது நடக்கும் நிகழ்வுகளை ஆழமாகவும், கவலையுடனும் சுட்டிகாட்டியுள்ளார். கல்லூரிமாணவர்கள் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர்களும் படிக்கவேண்டிய நூல். தொடர்ந்து நல்லபடைப்பாளர்களை இனம் கண்டு மாணவர் சமுதாயத்துக்கு எடுத்துசொல்வதுடன் அவர்களின் செயல்பாடுகளை இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் அறிந்து கொள்ள இது போன்ற நூல்கள் தங்களிடம் இருந்து வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நூல் வெளியீட்டு விழா 26.1.13 மாலை மதுரையில் வடக்குமாசி வீதியில் மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பானதொரு நிகழ்வாக இருந்தது. .ஐந்துபேர் நூலை வாழ்த்தியும், ஐந்துபேர்கள் நூலைபற்றிய விமர்சனம் செய்தும் நடைபெற்ற கூட்டம் அருமையாக இருந்தது. எழுத்தாளர்கள் எஸ்.அர்ஷியாவும், பாண்டியகண்ணன் அவர்களை அழைத்து பேசசெய்து சிறப்பு செய்ததும், குயிலன் மற்றும் ரா.சிதம்பரம் அவர்களின் குடுபத்தினர்களை அழைத்து சிறப்பு செய்ததும் பாராட்டுதலுக்குரியது.

1 கருத்து: