திங்கள், ஜனவரி 14, 2013

ஒற்றைநட்சத்திரம்

ஒற்றைநட்சத்திரம் அணுஉலையால் ஆபத்து என்று எந்த மாநிலமும் இடம் தராத நிலையில் தமிழ்நாட்டில் தான் தமிழ் உணர்வு பேசிக்கொண்டு என இருபிரிவுகளாய் நிற்பதை அறிந்து இடிந்த கரையில் இடம் வாங்கி அணுஉலையை நிறுவி விட்டனர் இருபது ஆண்டுகளாய் ஆனாலும் மின்சாரம் இதுவரை உற்பத்தியாகவில்லை அணு உலை ஆபத்தை அரசியல் கட்சிகள் தெரிந்து இருந்தும் வாய்மூடி மெளனமாய் நின்ற போதும் ஒற்றை ஆளாய் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை உணர்த்திட்டாய் இன்று, அந்த பகுதி மக்களுக்கு சுப.உதயகுமார் என்பவர் மட்டுமே நம் வாழ்வியலை காப்பாற்ற போராடும் வீரனாய் தெரிகின்றாய் அதனால் நீ எங்களுக்கு இருண்ட அரசியல் வானில் ஒற்றைநட்சத்திரமாய் தெரிகின்றாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக