வெள்ளி, மே 04, 2012

ஹோமியோபதி பார்வையில் அறுவைச்சிகிச்சை நோய்கள்


          நோய் ஏற்பட காரணமான உறுப்புக்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால் மட்டுமே நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற கருத்தை ஆழமாக அலோபதி மருத்துவம் மக்களை நம்ப வைக்கின்றது. இது தலைவலி என்றால் தலையை நீக்கிவிட்டால் தலைவலி வராது என்பது போல் ஆகும்.

             எந்த ஒரு நோய்களுக்கும் அறுவை சிகிட்சை மட்டுமே தீர்வு அல்ல. நோய் ஏற்பட்ட உறுப்பு முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதனால் உயிர் இழப்பு ஏற்படும் எனில் அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.ஆனால் இன்று சிறுநீர் கற்களுக்கு கூட பெரிய அளவில் சிகிச்சை செய்யப்படுகிறது,அப்படி ஆபரேசன் மூலம் கற்களை அகற்றி கொண்டவர்களுக்கு மீண்டும் சிறுநீர்கற்கள் தோன்றியுள்ளது,அதன் பின்னர் ஹோமியோபதியில் நம்பிக்கை வைத்து மருந்துகள் மூலம் குணமாகியுள்ளனர்.


                  குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பு என்பது கர்ப்பப்பையை மையமாக வைத்து வரும் உடல்நோய்களுக்கு உடன்கர்ப்பப்பை நீக்கி விடுவதே சிறந்தது என்ற நம்பிக்கை அதிக அளவில் அலோபதி மருத்துவம் பெண்களுக்கு எடுத்துரைக்கின்றது. கர்ப்பபை என்பது குழந்தைபெற்றுக்கொள்ள மட்டுமே பயன்படும் ஒரு உறுப்பாக மட்டுமே பார்க்கப்பட்டு கர்ப்பபையில் கோளாறு எனில் கர்ப்பபையை நீக்கி விடுகின்றனர்.இதனால் கர்ப்பபை நீக்கிய பெண்கள் தற்காலிகமாக வலியில் இருந்து நிவாரணம் பெற்றாலும் அதன்பின் ஹொர்மென் கோளாறுகள் ஏற்பட்டு பெண்கள் மூட்டுவலி,இடுப்புவலி என நிரந்தரமான துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

                சிறுநீர் கற்கள் எந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது எந்த வகை கற்கள் உருவாகியுள்ளது என ஆய்வு செய்து எதனால் நோயாளிக்கு கற்கள் உருவாகியுள்ளது,சிறுநீர் போவது அடக்கப்படுவதலா? கால்சியம் அதிகம் உள்ள காய்கறி,பழங்கள் சாப்பிட்டதாலா? அவர் குடிக்கும் குடிநீர் தன்மை எப்படிபட்டது என நோயாளி மூலம் கேட்டறிந்து அந்த குறிகளுக்கு ஏற்ப மருந்துகள் ஹோமியோ மருத்துவத்தில் தரப்படுவதால் ஆபரேஷன் செய்யாமலேயே சிறுநீர் கற்கள் கரைக்கப்பட்டு சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் செல்லும்போது கற்கள் வெளியேற வைக்கப்படுகின்றன.காந்தாரீஸ்,சரசபில்லா, பல்சட்டில்லா, பெர்பரீஸ்வல்கரீஸ் போன்ற மருந்துகள் முக்கியமாக பயன்படுத்துகின்றனர். அப்படி சிகிச்சை செய்தவர்களுக்கு பல வருடங்கள் சிறுநீர் கற்கள் உருவாக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
             
                 அப்பன்டீஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையும் அப்படிதான் குடல்வால் ஒரு தேவையற்ற உறுப்பு எனபலரும் கருதுகின்றனர், மனித உடலில் எந்த ஒரு உறுப்பும் தேவையற்ற உறுப்பு என ஒன்றுமில்லை ,எதற்கும் பயன்படாத உறுப்புதான் குடல்வால் பகுதி எனில் அங்கு ஏன் பிரச்சனை வருகிறது பெருங்குடலில் ஏதாவது ஒரு பிரச்சனை எனில் முழுஉறுப்பும் பாதிக்கப்படும் முன் நமக்கு உணர்த்தும் ஒரு உறுப்புதான் குடல்வால் பகுதி தகுந்த மருந்துஎடுத்துக்கொண்டால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

                      அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு விரைவில் அதன் காயம் ஆறுவதுடன் தழும்புகள் ஏற்படுவதை தடுப்பதிலும் ஹோமியோ மருந்துகள் முதன்மை பெறுகின்றது,அதில் ஸ்டெபிஷாக்கிரியா என்ற ஹோமியோ மருந்து முதன்மையான முதல் மருந்து...
               
                    ஹோமியோ மருத்துவத்தில் இருதயநோய்களுக்கு, சிறுநீர் கற்கள், அப்பண்டீஸ், கர்ப்பப்பை கோளாறு, மூல பிரச்சனை, சைனஸ் நோய்களுக்கு நிரந்திர தீர்வு அறுவை சிகிச்சை தான் என அலோபதி மருத்துவம் கூறும் நிலையில் ஹோமியோபதின் அறுவைசிகிச்சை செய்ய தேவையில்லாமல் குணமாக்கி வருகிறது.

                 அறுவை சிகிச்சை செய்யாமல் பல நோய்களை குணமாக்கிய தங்கள் அனுபவங்களை ஹோமியோ மருத்துவர்கள் ஆதாரத்துடன் புத்தகமாக வெளியிட்டுள்ளனர், நோயை முற்றும் முன் ஆரம்பத்திலேயே ஹோமியோ மருத்துவம் எடுத்துகொண்டால் அறுவை சிகிச்சை தேவைபடாமல் குணமாக்கலாம்.
                  மேலும் பிரசவநேரத்தில் குழந்தை தலை திரும்பவில்லை போன்ற காரணங்கலை கூறியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, கர்ப்ப காலத்தில் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துகொண்டவர்களுக்கு 90 சதம் சுகபிரசவம் ஏற்பட்டுள்ளது. தலை திரும்பவில்லை என கடைசி நேரத்தில் “பல்சட்டில்லா” எனும் ஹோமியோபதி மருந்து தந்து பல தாய்மார்களுக்கு சுக பிரசவம் ஏற்ப்ட்டுள்ல அனுபவம் ஹோமியோ மருத்திவத்தில் உண்டு.

                (மேற்படி எனது கட்டுரை, ஏப்ரல் 29யில் சாத்தூரில் நடைபெற்ற ஹானிமன் விழாவில் வெளியிடப்பட்ட "அவசியம் தானா இத்தனை அறுவைச் சிகிச்சைகள்? " ஹோமியோபதி ஆய்வுத் தொகுப்பு நூலில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி.)

            தற்போது ஜனவரி 2014 மாற்றுமருத்துவ இதழில் வெளிவந்துள்ளது.

            [ஆசிரியர்.  டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்  அவர்களுக்கு நன்றி|]

              குறிப்பு: இதில் குறிப்பிட்ட மருந்துகள் மருத்துவர் ஆலோசனைக்கு பின் பயன்படுத்துவும் காரணம் நமக்கு தேவையான வீரிய அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும்...

5 கருத்துகள்:

  1. நல்ல் கட்டுரை.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியப்படுகிற எழுத்து.சொன்ன விசயங்களும்,
    சொல்லிச்சென்ற விதமும் அருமை.வாழ்த்துக்கள்.
    நன்றி.வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அலோபதி மருத்துவத்தை நாடுவதற்கு பதில் மாற்று மருத்துவத்தையும் நாடலாம் என்ற தங்கள் பதிவு அருமை. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கட்டுரை... பாராட்டுக்கள் சார்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு