ஞாயிறு, மே 05, 2013

தவிப்பு


காலையில் பின் பக்க வாசலில் உட்கார்ந்து பல் தேய்த்து கொண்டிருந்த மனைவி சூ சூ என விரட்டிகொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது பின் பக்க வாசல் படியின் கீழ் ஒரு பூனை குட்டிபூனை உட்கார்ந்து இருந்தது, இது யார் வீட்டு பூனை என கேட்டேன், ம் எனக்கு எப்படி தெரியும்,எல்லாம் எனக்குன்னு வந்து வாய்க்குதுக என காப்பி போட எழுந்து சென்றாள்.
         
          வாசபடியில் உட்கார்ந்து கொண்டு பூனையை பார்த்தேன் குட்டிபூனை என் கால் அருகில் வந்து உட்கார்ந்து மியாவ் என பலகீனமாக குரல் கொடுத்து என்னை பார்த்தது, அதே நேரம் மனைவியும் எனக்கு காபி தர வாங்கிய நான் சிறிது காப்பியை தரையில் ஊத்தினேன் நக்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் என்னை பார்த்தது, உங்களுக்கு தந்தா பூனைக்கு ஊத்துரீங்க அப்புறம் பூனை எங்கும் போகாது போங்க குளித்துவிட்டு வேலைக்கு கிளம்புங்க என மனைவி கத்த காப்பியை குடித்து விட்டு குளிக்க கிளம்பினேன்

         . மாலை வீட்டுக்கு வந்தா , பின்கதவை திறக்க முடியல பூனை வீட்டுக்குள் வந்துவிடுது என மனைவி புலம்ப பின் பக்கம் சென்றேன், பூனை பின் பக்க படியில் உட்கார்ந்து இருந்தது, சூ என விரட்டினேன் போகாமல் விரட்டும் என்னை பார்த்து மியாவ் என்றது, தண்ணியை எடுத்து அதன் மேல் ஊற்றினேன் அது வேண்டா வெறுப்பாக வீட்டின் சைடு பக்கம் உள்ள தோட்டத்துகுள் சென்றது, அதே நேரம் ஒரு நாய் துரத்த பூனை மரத்தில் ஏறி கொண்டது.

         இப்படியாக பின் வாசல் கதவை திறக்குப் போது எல்லாம் பூனை படியில் உட்கார்ந்து இருக்கும், சிலசமையம் இருக்காது, அப்பாட என மனைவி நினைக்கும் சமயம் தோட்டத்தில் இருந்து வந்துவிடும். பின்பக்கமே உட்கார் முடியவில்லை என மனைவி புலம்பினாலும் அவ்வம் போது மோர் சாதம் , பிஸ்கட் வைப்பாள், எனவே பூனை எங்கும் போகாமல் இங்கேயே இருந்தது, சிலநேரம் நாய் துரத்தும் பூனை மரத்தில் ஏறிக்கொள்ளும், பூனை மரம் ஏறும் போது மரத்தில் உள்ள குருவிகள் பயத்தில் கத்தும்.

            இப்படி பத்து தினம் கடந்து இருக்கும் , ஒரு நாள் காலையில் குளித்துகொண்டு இருந்தேன், மனைவியும்,மகளும் கத்தும் குரல் கேட்டு கதவை திறந்துகொண்டு பதட்டத்தோடு வந்து பார்த்தபோது முன் வாசலில் மனைவி கோலம் போட்டுகொண்டு இரந்த போது பூனை முன் வாசல் வழியாக நுழைந்து விட அதைபார்த்து தான் கத்தியுள்ளார்கள். பதட்டதோடு வந்த நான் கோபத்தில் பூனையை காலால் எத்தினேன், கத்திகொண்டே பின் வாசல் வழியாக ஓடிவிட்டது. ஏங்க எத்திரீங்க என மனைவி கேட்க, ஆமா மனுசனை நிம்மதியா குளிக்கவிடுரீங்களா என கத்தினேன்.

            சமையல் அறையை ஒட்டியே பின்வாசல் கதவு, குளித்துவிட்டு சாப்பிட்டுகொண்டு இருக்கும் போது மியாவ் என குரல் கொடுத்து கொண்டு பூனை வாசல் வழியாக எட்டிபார்த்தது, கையில் இருந்த இட்டலி துண்டை பூனை முன் துக்கிபோட வந்து சாப்பிட்டது பூனையின் தலையை தடவி தந்தேன் பேசாமல் இருந்தது, அப்படியே பூனை கழுத்தை பிடித்து தூக்கி ஜவுளி வாங்கும் போது தந்த கட்டை பையில் வைத்து பையை இருக்க மூடிபிடித்து கொண்டேன்,மகளை பெப் ஸ்கூட்டரை ஓட்டசொல்ல பின்னால் உட்கார்ந்து கொண்டு, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையை திறந்து பூனையை வெளியில் விட்டேன். வெளியில் வந்த பூனை எங்களை பார்த்துவிட்டு புதர்குள் ஓடிவிட்டது.

               அப்பாடா என நிம்மதி மூச்சைவிட்டுவிட்டு வீடு வந்தேன். பாதியில் விட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உடைமாற்றி அலுவலகம் கிளம்ப பைக்கை வாசலில் இருந்து கீழே இறக்கிகொண்டு இருந்தேன், மியாவ் என குரல் கொடுத்துகொண்டே என்னை கடந்து என் வீட்டு தோட்டத்தில் நூழைந்த பூனையை நானும், என்னை வழி அனுப்பவந்த மனைவியும்,ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தோம். அலுவலகம் செல்லநேரம்மானதால் மாலையில் பார்த்துகொள்ளலாம் என் புறப்பட்டேன்.

                   அலுவலகத்தில் நண்பர்களிடம் பூனையை பற்றிகூறினேன், என் வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி போய் பூனையை விட்டுவந்தேன் இடையில் பல வீடுகள் உள்ளது, அதையெல்லாம் கடந்து என் வீட்டுக்கு எப்படி வந்தது என தெரியவில்லை என்றபோது நண்பர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.தோழர் நல்லபாசமுள்ள பூனையாக இருக்குது பேசாம் நீங்களே வளர்க்வேண்டியதுதானே என்றனர். இல்லை சாய்ந்திரம் போய் வேறு இடத்தில் போய்விட வேண்டும் என கூறியபோது, சிலர் திட்டினார்கள்.

               மாலை வீடு வந்தபோது பூனையை காணவில்லை, பூனையை காணாம் எங்கே என மனைவியிடம் கேட்டேன் ஆமா எங்களையெல்லாம் தேடாதீர்கள்,என கூறிகொண்டு இருக்கும்போதே மியாவ் என குரல் தந்தவாரே பின் வாசலில் வந்து எட்டிபார்த்தது,பிடித்து வேறு இடத்தில் விட்டுவிடுகிறேன், என கூற மழைமேகமாய் இருக்கு நாளை பார்த்துகொள்ளலாம் என கூறிவிட்டாள்.

            மறுநாள் காலை மனைவி கோலம் போட்டுகொண்டிருந்தாள், அவளை கோலம்போடவிடாமல் அவள் காலேயே சுற்றிவந்தது. உடன் பூனையை பிடித்து மீண்டும் கட்டைபையில் போட்டுகொண்டும், 5 கி.மீ தள்ளி போய் விட்டுவிட்டு வந்தேன். காலையில் எழுந்த மகள் பின் பக்கம் சென்று பூனையை காணாம் என தேடினால், பூனையை விட்டுவந்த விஷயத்தை கூறினேன். தினம் எழுந்து நான்,மனைவி,மகள் பின் பக்கம் சென்று பார்ப்போம்,பூனை வந்து இருக்குமோ என ஆனால் பூனை இருக்காது,

          மூன்று நாள் கடந்து இருக்கும்,காலையில் முன் வாசலில் நின்று பல் தேய்த்து கொண்டிருந்தேன்,மியாவ் என சப்தம் உடன் என்னுள் ஒரு உணர்வு வாசலில் எட்டிபார்த்தேன் பூனையை காணவில்லை,பிரம்மையாக இருக்கும், என நினைக்கும் போதே மீண்டும் மியாவ் என சப்தம். இந்தமுறை பின் வாசல் பக்கம் குரல் வந்தது, அதே நேரம் படுத்து இருந்த என் மகளும் பின் பக்கம் எழுந்துபோக, சமைத்துகொண்டிருந்த மனைவி பின் கதவை திறக்க அங்கே மியாவ் என்றவாறே உள்ளே எட்டிபார்த்தது.

         மூன்று நாள் எங்களுக்குள் இருந்த தவிப்பு ஆச்சரியமாய் மாறி சந்தோஷமாய் ஆனது.

5 கருத்துகள்:

  1. தவிப்பு அருமையான பதிவு. சகஉயிர்கள் மீதான நம் அன்பே இவ்வுலகை இயக்குகிறது.

    பதிலளிநீக்கு
  2. மனித மனத்தின் தவிப்பு.

    பதிலளிநீக்கு
  3. தவிப்பு மனதை தவிக்கவக்கத்தான் வைத்தது ..!

    பூனை திரும்ப வந்த்ததும் நிம்மதி ..!

    பதிலளிநீக்கு
  4. http://blogintamil.blogspot.in/2013/08/2_27.html

    வலைச்சர அறிமுகம் ..
    வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. Superb ...! இருந்து இல்லாமல் போவதின் வலி ஆகக்கொடியது , இல்லாமல் போனது மீண்டும் கிடைக்கப்பெறுவது ஆகப்பெரிய சந்தோசம் ...!

    பதிலளிநீக்கு