வியாழன், செப்டம்பர் 20, 2012

நெசவு,,,,,,,


நண்பர்களின் இலக்கிய ஆர்வத்தால் துளிர்ந்த அமைப்பு "இலக்கியா".
26.8.12 ஞாயிற்றுகிழமை மதுரை கிரீன் வாக்கில் கலந்து கொண்டு விருதுநகர் திரும்பும் போது நண்பர் கவிஞர்.சரனிதா இன்று மாலை 6 மணிக்கு இலக்கியா எனும் இலக்கிய அமைப்பு புதியதாக ஆரம்பித்துள்ளோம்,தாங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றார். நண்பர்கள் சந்திக்கும் போது ஏதோ ஏதோ கருத்துக்கள் பற்றி பேசுவோம் அப்புறம் வீடு திரும்பிவிடுவோம் அடுத்த நாள் மறந்துவிடுவோம், நாகர்கோவிலில் இருந்து வந்த நண்பர்தான் சந்திப்பை வாரம் ஒருநாளாவது முறைபடுத்துங்கள் அது மிகபயனுள்ள அனுபவங்களை உங்களுக்கு ஏற்படுத்தும் என ஆலோசனையை கூற அதை இலக்கியா என பெயர்சூட்டி அமைப்பை ஏற்படுத்தியவர் கவிஞர் சரனிதா.
நானும் அன்று மாலை 6 மணிக்கு சென்றேன் அங்கு
திரு.சக்திமுத்து கிருஷ்ணன்,
திரு.சரனிதா,
திரு.பாலசுப்பிரமணி,
திரு.நடராஜன்,
திரு.நரசிம்மன்
திரு.ரகுபதி,
திரு.விமலன்,
திரு.ஆதிநாராயணன்,
திரு.கிருஷ்ணன்,
திரு.சசிக்குமார்,
இவர்களுடன் நானும் கருத்துபட்டரையில் கலந்து கொண்டேன்.

1 கருத்து: