இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

தூப்புக்காரி நாவல்

 



         தூப்புக்காரி நாவல் பற்றி என் எண்ணபதிவுகள் பதியும் முன்,   நாவலை வாங்கும் முன் எனக்கு ஏற்பட்ட அனுபவபதிவுகள்...,

        விருத்தாசலத்தில் இருந்து எழுத்தாளரும், நண்பருமான, தம்பி கண்மணிகுணசேகரனிடம் இருந்து போன் அண்ணே தூப்புக்காரி படித்தீங்களா? இங்கு கிடைக்கவில்லை அங்கு கிடைத்தால் வாங்கி              அனுப்பமுடியுமா என்றார்.
          அதன்பின் ஆனந்தவிகடனில் தூப்புக்காரிபற்றி எழுதியதை படித்தேன். அதேநேரம் பேஸ்புக்கில் திருவில்லிபுத்தூர் ரத்தினவேல் அவர்கள் தூப்புக்காரி நாவல்பற்றியும் அதன் பதிப்பக விலாசம் மற்றும் போன் என்னை குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் குறிப்பிட்ட நாகர்கோவில் திருவள்ளுவர் புத்தகநிலையத்தை தொடர்புகொண்டபோது தற்சமயம் மிக குறைவான பிரிதியே இருப்பதால் இங்குவந்து கேட்டபவர்களுக்கு மட்டுமே தரவேண்டியநிலை,  
      இன்னும் பத்துநாளில் மறுபதிப்பு வந்துவிடும் என்றார்கள்,     உடன் நான் அங்கு உள்ள உறவினருடன் தொடர்புகொண்டு அந்த புத்தகம்   வாங்கமுடியுமா என்றேன்,    நாளை செல்கிறேன் என கூறினார். மறுநாள் புத்தகம் வித்துவிட்டது என தகவல் கூறினார்.
        அன்றைய மதுரை தினமலரில் தூப்புக்காரி நாவல் எழுதி இளம்படைப்பாளர் படைப்புக்களுக்கான சாகித்ய அகடாமி விருது பெற்ற மலர்வதி அவர்களை பாராட்டி கட்டுரை வந்து இருந்தது, அதில் அவருடைய செல்பேசி எண் குறிப்பிட்டு இருக்க, உடன் அவர்களுக்கு விருதுபெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பேசினேன், நன்றி கூறி நாவல்படித்தீர்களா என்றார், நாவல்கிடைக்கவில்லை என விபரம் தெரிவித்தேன்,
           அதற்கு அவர் எனக்காக இரண்டு நூல் எடுத்து வைத்துள்ளனர் நான் தங்களுக்கு அனுப்ப கூறிகிறேன் என்றார், இல்லை நான் நான்கு தினத்தில் நாகர்கோவில் அருகில் உள்ள குலசேகரம் ஊருக்கு வர இருப்பதால், முடிந்தால் நேரில் பெற்றுக்கொள்கிறேன் என கூறிவிட்டேன்.
     
                 ஏப்ரல் 10ம் தேதி உறவினர்களுடன் குலசேகரம் ஊருக்கு செல்லும் வழியில் நாகர்கோவிலில் மதிய உணவுக்காக ஹோட்டல் செல்ல நான் மட்டும் திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,  
         விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.
               நாவல் பற்றி

                       தூப்புக்காரி, மனித கழிவுகளை சுத்தம் செய்யும் ஒருபெண்ணின் மன வலிகளையும், அவள் மகளின் மனவலியையும் நம்முன் சித்திரமாக வரைந்துள்ளார்.
          அழுக்கான உடைஉடுத்தி அழுக்கில் நின்றாலும் அந்த மனிதர்களின் வெள்ளை மனதை நம்முன் காட்டும்போது, நம் அழகான சட்டைகூட அழுக்காக தெரியும் மன அழுத்தத்தை நமக்கு உணர்த்தும் விதமாக உள்ளது, நாவலை படித்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்ப மிக சிரமமாகவே உள்ளது.
           இதுவரை யாரும் சொல்லாத கதைகளம் படிக்கும் போது நம் அகத்தின் அழுக்கை நமக்கு உணர்த்துகிறது.
        கதை தனிமனிதரையோ, இந்த சமூகத்தையோ சாடவில்லை, ஆனால் சுட்டிகாட்டுகிறது.
அம்மா ஆஸ்பத்தரியில் கழிவரையை சுத்தம் செய்யும் தொழிலை வெறுக்கும் மகள் பூவரசி, சந்தர்ப்பவசத்தால் அதே வேலைக்கு செல்லவேண்டிய நிலை பூவரசி கழிவரையை சுத்தம் செய்யும் போது அவளுக்கு ஏற்படும் மனவேதனையை நாம் அருகில் நின்றுகொண்டு மூக்கை பொத்திக்கொண்டு நேரில் பர்ப்பதை போன்ற  உணர்வை தருகிறது கதையின் நடை. நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழாநடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
   கிளைகளின் சலனம்
   ஊருக்கு தெரியும்?
   வேர்களின் அழுகை
   யாருக்கு தெரியும்?
  இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு அழகுசேர்க்கின்றன.
 மாரியும், பூவரசியும் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களாக உலாவருகின்றனர்.
இது பெண்களின் மன உலகை சுட்டிகாட்டுவதால் ஒரு பெண்ணியநாவலாக உள்ளது. விருது பெற்றமைக்கு தகுதியுள்ள நாவல்.



        21.4.2013 அன்று காலை விருதுநகரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில்  தூப்புக்காரி நாவல் எழுதிய மலர்வதி அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. பல இலக்கிய படைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பலர் பாராட்டி பேசினர், ஏற்புரையில் மலர்வதி சிறப்பாக பேசினார்.

சனி, பிப்ரவரி 16, 2013

இலக்கியவாதிகள் சந்திப்பு 2


         கடந்த வாரம் அம்மாவை பார்க்க திருமங்கலம் சென்றேன். அப்படியே எழுத்தாளர் நண்பர் திரு.ஷாஜஹான் அவர்களை பார்க்கலாம் என போன் செய்தபோது என்ன வேல்முருகன் ஆளையே காணாம் வாருங்கள் வீட்டில் தான் உள்ளேன் என கூற அவரை பார்க்க சென்றேன். அவரை சந்தித்தபோது நான் வெகு நாட்களுக்கு முன்கேட்ட வண்ணநிலவன் எழுதிய ”கடல்புறத்திலே” நாவல் மற்றும் நான் கேட்காத ”கம்பா நதி” நாவலையும் சேர்த்து தந்தார், சென்னை புத்தககண்காட்சிகு சென்றபோது உங்களுக்கா வாங்கினேன் என்றார்.
          மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மற்றும் பல விஷயங்களை பற்றி பேசினோம். நண்பர் அர்ஷியா,மற்றும் முத்துகிருஷ்ணன் அவர்களை பார்தீர்களா என கேட்டார், மதுரை சென்று வெகு நாள் ஆகிவிட்டது என சொன்னேன்,, திருநகர் போவோம் என உடன் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு போன் போட்டார், அவர் வேறு நிகழ்வில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது எழுத்தாளர்.பெருமாள்முருகன் திருமங்கலம் வந்துள்ளதாக உடன் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு போனோம்.
          அதற்கு முன் இரண்டு விஷயங்களை கூற வேண்டும் நான் முதன் முதலில் சந்திக்க சென்ற அர்ஷியா மற்றும் கவிஞர்.சாம்ராஜ்(தனிதனியாக சந்தித்த நாளில்) அவர்கள் வீடுகளுக்கு போன போது முன்பின் அறிமுகம் ஆகாத நிலையிலும் வெகு நாள் பழகிய நண்பர்களை போல் பேசினார்கள் விடைபெற்று போகும் போது அவர்கள் பொகிஷமாக வைத்து இருந்த புத்தகங்களை படிக்க தந்தார்கள். நானே இப்படி தந்ததில்லை,ஆச்சரியமாக இருந்தது.

 
         அதேபோல் தான் ஷாஜஹான் அவர்களும், இவர் கவிஞர்,நாவலாசிரியர்,மொழிபெயர்ப்பாளர். என்விகடனில் ”எனது ஊர் திருமங்கலம்” என கட்டுரை எழுதியுள்ளார். வீடு முழுவதும் புத்தகம் புத்தகம் தான் இவர் நல்ல விமர்சகர் இவரை பற்றி எழுத்தாளர்களுக்கு தெரியும். இவரை மொழிபெயர்புக்கு பதிப்பகங்கள் பயன்படுத்திகொண்டால் பல அறிய நூல்கள் தமிழுக்கு கிடைக்கும்.
           பெருமாள்முருகன் இருவரையும் வரவேற்றார். நான் அவரை இப்போது தான் சந்திக்கின்றேன்.இருவரும் தமிழ் இலக்கிய போக்கு பற்றியும், பதிப்பகங்கள் பற்றியும் பேசினார்கள், நான் பார்வையாளனாக அமர்ந்து கேட்டுகொண்டு இருந்தேன்,இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை, அன்றைய நாள் மறக்கமுடியாத நாளாக என் மனதில் பதிந்துபோனது.

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

என் இலக்கிய நண்பர்கள்,,,,,,,


நான் படிக்கும் கட்டுரைகள் ,கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் எழுதியவருக்கு கடிதம் எழுதிப் போடுவதுதான் என வழக்கம். 

தொலைபேசியில் பேசலாம்,நாம் பேசும் போது படைப்பாளி நம் பேச்சைக்கேட்கும் நிலையில் இருக்க வேண்டும்.அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது தெரியததால் நம் எண்ணங்களை அவருடன் பகிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பதால் அவரது விலாசத்திற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்வேன். 

பல நேரங்களில் படைப்பாளிகளிடமிருந்து கடிதம் வராது,நான் தொலை பேசி எண்னை குறிப்பிட்டு இருப்பேன்.பதிலும் வராமல் போய்விடும்.ஆனால் சிலரிடமிருந்து போன் வரும்.அப்போது மனதில் மகிழ்வு தோன்றும்.அத்துடன் இந்த அந்த போன் பேச்சுடன் சில படைப்பாளிகளின் தொடர்பு விட்டு விடும். 

ஆனால் அந்த தொடர்பு சிலரிடம் நட்பாக மலர்ந்து இணை பிரியா நட்பாகக்கூட மாறியுள்ளனர்.அப்படிபட்ட படிப்பாளிகளான இலக்கிய நண்பர்கள் சிலர் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். 

ர,சு நல்லபெருமாள்; இப்போது உள்ளவர்களுக்கு இவர்களைத் தெரியுமா என்பது தெரியாது.1970முதல்1985 வரை ஆனந்த விகடன் ,கல்கியில் பிரபலமான தொடர்கதைகள் எழுதிய நாவலாசிரியர்.அகிலன்,நா.பா போன்றவர்கள் எழுதும் போது அவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர். 

நான் சிறுவயதில் பள்ளி விடுமுறை தினங்களில் எனது பெரியம்மா வீடு போகும் போது வார இதழ்களில் வந்த கதைகளைத் தொகுத்து பைண்டிங்க செய்து வைத்திருப்பார்கள். 

அப்படி முதலில் நான்படித்த கதை “பொன்னியின் செல்வன” நாவல்.அதன் பின் அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன்” என வரலாற்று புதினங்கள் படித்து வந்த நிலையில் “திருடர்கள்” எனும் நாவலை படிக்கும் போது என்னுள் பிரமிப்பைத் தந்தது. 

அப்போது எழுத்தாளர் யார் என பார்த்த போது ர.சுநல்லபெருமாள் என இருந்தது.அதன் பின் அவரது கதைகளை படிக்க எண்ணி நூலகத்தில் தேடிய போது “கல்லுக்குள் ஈரம்” படித்தேன், 

இப்படி படிக்கும் போது அவர் பாளையம் கோட்டையில் இருப்பதாக தெரிந்தது.எனவே ஒரு போஸ்ட் கார்டில் ர.சு நல்ல பெருமாள் எழுத்தாளர்,பாளையம் கோட்டை என மட்டும் விலாசம் எழுதி கடிதம் போட்டேன்.அப்போது எனக்கு வயது17,18 இருக்கும். 

1980 இல்.ஒரு வாரம் கழித்து அவரிடமிருந்து கடிதம் வந்தது.அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு அது எந்த பதிப்பக வெளியீடு என குறிப்பிட்டும் கடிதமெழுதிமைக்கு நன்றி தெரிவித்தும் கார்டு போட்டிருந்தார். 

எனக்கு மகிழ்ச்சி வெள்ளம்,யாரிடம் பேசினாலும் “கல்கியில் கதை எழுதுபவரிடமிருந்து  கடிதம் வந்துள்ளது” என  பெருமையாகக் காட்டுவேன்,
ஆனால் மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅதை. 

அதன்பின்படிப்பு,வேலைதேடுதல்,திருமணம் எனஎன் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது. 

இடையில் கண்மணி குணசேகரன் மூலம் நெல்லையில் SETC யில் வேலை பார்க்கும் இசக்கி என்கிற நண்பர் அறிமுகமானார். 

இருவரும் இலக்கியம் பற்றி பேசும் போது எழுத்தாளர் ர.சு நல்ல பெருமாள் அவர்களைப் பற்றியும்,சிறுவயதில் அவர்களுக்கு நான் கடிதம் எழுதி பதில் வந்துள்ளது என்றேன்.அவர் “ஆம்,நான் ஒரு தடவை நண்பரைப்பார்க்க பாளையங்கோட்டைபோயிருந்தபோதுரசுநல்ல பெருமாள் எழுத்தாளர்,வக்கீல் என போர்டு மாட்டிய வீட்டைப்பார்த்துள்ளேன்” என்றார்.அவரை முடிந்தால் சந்திக்கவும் எனக்கூறினேன். 

ஒரு மாதம் கடந்து இருக்கும்,நண்பர் இசக்கி அவர் வீடு சென்று என்னைப்பற்றி கூறியுள்ளார்.உடனே என்னுடன் பேச விரும்பி அவரது செல் பேசி மூலம் பேசினார்.

கடிதம்வந்துமுப்பதுஆண்டுகளுக்குப்பிறகுஎன்மனம்கவர்ந்தஎழுத்தாளரிடமிருந்துபோன்.10 நிமிடம் பேசினார்.பல விசயங்களை பேசினார்.மிக்க மகிழ்வான நாளும்,மறக்க இயலாத நாளுமாய் அது என்னுள் பதிவகியது. 

அதன்பின்பத்துநாட்கள்கழித்துமீண்டும்நண்பர்இசக்கியிடமிருந்து போன்,
அதிர்ச்சியான தகவல்,ர,சு நல்ல பெருமாள் இறந்து விட்டார் என/நேரில் சந்தித்து பேசும் முன்பாகவே இறந்து விட்டார். 

அ.முத்துக்கிருஷ்ணன்; உயிர்மை இதழ் கட்டுரைகள் மூலம் எனக்கு தொடர்பு ஏற்பட்டு க்ரீன் வாக் அமைப்பு மூலம் மேலும் நெருக்கமான தொடர்பு ஆனதால் இன்று நண்பரானார்.
 


மாதம்ஒரு முறை மதுரையில் சந்திக்கும் நண்பரானார். இவர் மூலம் பல படிப்பாளிகளின் அறிமுகம் கிடைத்தது.மாதம் ஒரு முறை மதுரையில் நேரில் சந்திக்கும் நண்பர் அவ்வப்போது தொலைபேசியிலும் பேசிக்கொள்ளும் நண்பர்.பேச்சைப்போலவே அவரது கட்டுரைகளும்ஆவேசம்கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியது. 

எஸ்,அர்ஷியா; “உங்கள் நூலகம்” மாத இதழில் நீலகண்டப்பறவையை தேடி என்ற கட்டுரையை படித்தேன்.அதன் மூலம் ஏழரை பங்காளி நாவலைப்படித்தேன்.அந்த நாவலின் கதைப்பகுதி இஸ்மாயில்புரம். 

அந்தப்பகுதியில் எனது நண்பர் கதிரவன் இருந்தார்.அங்குதான் எனது இளமைப்பருவம் பல நாட்கள் கழிந்தது என்றாலும் அந்தப்பகுதியின் கதையை ,இஸ்மாயில்புரம் தோன்றிய வரலாற்றை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.உசேன் பாதிரப்படைப்பு என்னை வெகுவாக பாதித்தது.உடன் அவருக்கு கடிதம் எழுதினேன்.உடன் அவரிடமிருந்து போன் வந்தது.பலவிசயகளை பகிர்ந்து கொண்டோம்.மதுரை வந்தால் சந்திப்போம் என்றார்.
மதுரை NCBH புத்தகக்கடையில் ஒரு நாள் சந்தித்தேன்.முதல் சந்திப்பே மறக்க முடியாத மகிழ்வான சந்திப்பு.அந்த சந்திப்பின் நினைவாக NCBHல் இரண்டு புத்தகங்கள் ரூ 400க்கு வாங்கி அன்பளிப்பாகத் தந்தார் எனக்கு
நன்றிகூறவார்த்தைகள்இல்லாமல்செய்து விட்டார். 

இலக்கியம் மட்டுமல்லாது குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நண்பராகி விட்டார்.என் இலக்கிய உலகின் முதன்மையான நண்பர்.

அவரது மூன்றாவது நாவல் அப்பாஸ் தோப்பு புத்தகமாக வரும் முன் படித்துப்பார்க்கும் நண்பர்களில் ஒருவராக என்னை மாற்றியுள்ளார்.இவர் மூலமும் நல்ல இலக்கிய வாதிகள் அறிமுகம் கிடைத்தது.தரமான இலக்கிய படிப்புகள்தரும்இவர்இலக்கியஉலகில் பேசப்பட வேண்டிய எழுத்தாளர்.காலம் பதில் தருமா? 

கண்மணி குணசேகரன்;அ.முத்துக்கிருஷ்ணன் என்னோடு பேசும் போது தங்கள் போக்குவரத்துக் கழகத்தை மையப்படுத்தி வந்துள்ள நெடுஞ்சாலை நாவலைப் படித்தீர்களா என்றார். உடன்  வாங்கிப்படித்தேன்.  போக்குவரத்தின்
மெக்கானிக்,நடத்துனர்ஓட்டுனர்,பற்றிய கதை.அருமையான பதிவு. 

அவரைதொடர்புகொண்டுபேசியபோதுஅவரும்என்னைபோலபோக்குவரத்துக்
கழத்தில் மெக்கானிக் என அறிந்த போது மேலும் நெருங்கி இன்று உடன் பிறவா தம்பி ஆகிப்போனார்.(வயது வித்தியாசம் காரணமாக)இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை என்னிடம் பகிர்ந்து கொள்வார். 

அவர் எழுதிய அஞ்சலை நாவல் படிப்பவர்கள் நிச்சயமாக கண்மணி பற்றி தெரிந்து கொள்வார்கள்.கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அவரது படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் சென்று வந்தேன்.மறக்க முடியாத அனுபவங்களை தந்த நிகழ்வாய் அது. 

விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா,நாஞ்சில் நாடன்,சு,வேணுகோபால் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் இலக்கிய உலகில்பேசப்படும் எழுத்தாளராக வலம் வருவார்.அவரின் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு மகிழ்வைத் தரும். 

விமலன்;விருதுநகர்  அருகிலுள்ள  பெரியபேராலி  கிராமத்தை  சேர்ந்தவர்.
சிறுகதை  எழுத்தாளர்,  புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகரில்
எஸ்ஏபெருமாள்  அவர்களின்  கூட்டம்  நடைபெற்றது.  அங்குதான் சந்தித்துப்
பேசினோம். 

“நான்மூர்த்திஅரசுத்துறையில் எனதுபணிஎனகைகுலுக்கினார்.நான் பேசுவதை அதிகம்கேட்டார்,அவர் குறைவாக பேசினார்.ஆனால் நண்பர் பாண்டியக் கண்ணன்தான் இவர் விமலன்  என்கிற  பெயரில் மூன்று  சிறுகதை தொகுப்பு
களை போட்டுள்ளார்.என்றார். 

அடுத்த சந்திப்பில் அவரது சிறுகதை தொகுப்பு இரண்டு புத்தகம் தந்தார்.ஒன்று “காக்காசோறு,மற்றொன்று“வேர்களற்று”/ 

இரண்டு நூலும் சிறுகதைதொகுப்பு.எளிமையான கதைகளாக வாழ்க்கையை உணர்த்தும் கதைகள். 

எனக்கு நெடுஞ்சாலை என்ற பெயரில் வலைத்தளம் ஏற்படுத்தித் தந்து என்னை எழுததூண்டிய நண்பர்.இன்று என் எண்ணப்பதிவுகள் எழுத்துக்களாக மாறியுள்ளதற்கு காரணமானவர். 

தினசரிபோனில்பேசும்நண்பர்இவர்சிட்டுக்குருவிஎன்ற பெயரில் வலைத்தளம் ஒன்றை நடத்தி வருகிறார்.வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என கதை,கட்டுரைகள் எழுதி பதிவு செய்யும் நல்ல மனிதர்.எளிமையான நண்பர்.இவர் மூலம் விருதுநகரில் இலக்கிய ஆர்வலர்கள் அறிமுகம் கிடைத்தது. 

இவர்களைத்தவிர பலஇலக்கியவாதிகள் குறிப்பாக திருமங்கலம் ஷாஜகான்,
மீரான்மைதீன்,பாண்டியக்கண்ணன்  குறிப்பிடத்தக்கவர்கள்  நான் பேச
மறந்தாலும் அவர்களாக தொலை  பேசியில்  தொடர்பு   கொண்டு   நலம்   விசாரிக்கும் இலக்கிய படைப்பாளிகள். 

எஸ்.ராமகிருஷ்ணன்,கோவில்பட்டிஉதயசங்கர் இவர்களுடன் அவ்வப்போது உரையாட அனுமதிக்கும் வாசகனாய் வலம் வருகிறேன். 

எனது இலக்கியத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இலக்கிய நண்பர்களும் ளர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்.வட்டம்பெரிதாகும்,வட்டத்தில் வரும் நண்பர்களைப்பற்றி பிரிதொரு சந்திப்பில்,,,,,,/