வெள்ளி, பிப்ரவரி 21, 2014

பசுமைநடை [31 வது நடை] திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்ஹா பயணம்




         இந்த மாதம் 16 ம் தேதி பசுமைநடை திருப்பரங்குன்றம் மலை உச்சி  என்று முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தகவல் வந்தவுடன் சந்தோசப்பட்டேன்.  மதுரையில் வசிக்கும் போதும், தற்போது பணியின் காரணமாக விருதுநகரில்   வசிக்கும் போதும் சரி திருப்பரங்குன்றத்தை கடக்கும்போது எல்லாம் மலை உச்சிக்கு செல்லவேண்டும் என எண்ணுவது உண்டு. அந்த கனவு பசுமைநடையின் மூலம் நனவாக போகின்றது.
   
    இந்தமுறை விருதுநகரில் இருந்து அதிகமான நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என எண்ணினேன் கடந்தமுறை இதே பிப்ரவரி மாதம் தான் பசுமைநடை திருப்பரங்குன்றம் மலை யில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் சென்றோம். அது மலை உச்சில் இல்லை மலையின் பாதி உயரத்தில் மலையின் தென்பகுதியில் உள்ளது. அப்போது விருதுநகரில் இருந்து 14 பேர் கலந்துகொண்டோம், எனவே இந்தமுறையும் அதிகமான நண்பர்களை அழைத்து செல்லவேண்டும் என நண்பர்களுக்கு தகவல் கூறினேன், நண்பர்களும் கலந்துகொள்ளுவதாக கூறிய நண்பர்கள்,
        வழக்கம்போல் முன் தினங்களில் பார்ப்போம், வரவில்லை என கூறிவிட்டனர்,தொடர்ந்து கலந்து கொண்ட நண்பர்களும் முக்கிய நிகழ்வு காரணமாக கலந்து கொள்ளமுடியாமல் போனது, கடைசியில் 5 பேர் மட்டுமே செல்லுவது என உறுதியானது.

          பசுமைநடைக்கு முன்தினம் சென்னையி உள்ள அக்கா மகள் துர்காவிடம் இருந்து போன் மாமா பசுமைநடையில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து, மதுரை  வந்துள்ளேன், நாளை எங்கு வர வேண்டும் என. மதுரையில் உள்ள உறவினர்கள் பலரிடம் கூறியபோதும் கலந்துகொள்ள நேரம் கிடைக்க வில்லை, சென்னையில் இருந்து பேஸ்புக் மூலம் தகவல் தெரிந்து கலந்துகொள்ள வந்திருப்பது மகிழ்ச்சி அளித்தது, காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் முன் வந்து விடவும் என தகவல் கூறினேன்.

         காலை 5 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு நண்பர்களுடன் பஸ் ஏறி திருமங்கலத்தை 6 மணிக்கு நெருங்கும் போது, துர்காவிடம் இருந்து போன் மாமா நான் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன் என  அப்போது வானம் கூட விடியவில்லை, தனியாக வந்துவிட்டால், அங்கேயே  இருக்கவும் நண்பரகள் வந்து விடுவாரகள் என பதில் கூறிவிட்டு பஸ்மாறி திருப்பரங்குன்றத்தை அடைந்த போது மணி 6.35 ஆகி விட்டது, நான் வரும் முன்பே துர்கா பசுமைநடை நண்பர்களுடன் நட்பாகி பேசிக்கொண்டு இருந்தால்,   பசுமைநடையின் சிறப்பே இதுதான் புதியவர்களையும் நெடு நாள் நண்பர்களாகவே பார்ப்பதால் முதல் முறை கலந்துகொள்பவர்களும் இது நம் குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.

         நண்பர் எஸ்.அர்ஷியா எனக்கு முன்பாகவே வந்து இருந்தார், வெகு நாள் கழித்து அவரை அங்கு சந்தித்தது, மகிச்சியை ஏற்படுத்தியது.
 
        7 மணிக்குள்ளாக சுமார் 150 பேர் கூடி விட்டனர், இன்னும் வந்து கொண்டு இருப்பதாக போன் வந்து கொண்டு இருந்தாலும் பசுமைநடை மலை நோக்கி புற்ப்பட்டு விட்டது, கேமிரா வைத்து இருப்பவர்கள், போட்டே சுட ஆரம்பித்துவிடார்கள்.
        இந்த முறை குளிர் இல்லை, அந்த நேரத்தில் சூரியன் வந்து இருந்தாலும் மேகம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டதால் இதமான வெளிச்சம் மட்டுமே மலை ஏறும் போது உற்சாக படுத்தியது. மலை ஏறும் போது ஒன்றாக இருப்பவர்கள், கூட்டம் நடக்கும் இலக்கை அடையும் போது தனி தனி குழுவாக வந்து சேர்வார்கள், ஆனால் இந்த முறை மலை ஏறுபவர்கள் பிரிந்து போகாமல் மொத்தமாக மலை ஏறவும், ஒரே இடத்தில் ஓய்வு எடுக்கவும் முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்ததால் ஒருவருக்கொருவர் நட்புடனும், புரிதலுடனும் மலை ஏறினோம்.
   
         மலைமீது பாதி தூரத்தை ஏறியவுடன் ஒரு பெரிய பாறை திட்டு வருகிறது அங்கிருந்து பார்த்தால் மதுரையின் மொத்த அழகும் பறவை கோணதில் பார்க்கும் போது ஆகா ஆகா என என்னதோன்றும். ரசித்துகொண்டே இருக்க புகை படம் எடுப்பவர்கள் குழுவாக உட்கார்ந்து இருக்கும்  ஆர்வலர்கலையும், சுற்றியுள்ள அழகையும் புகைபட கருவிக்குள் சிறைபடுத்திகொண்டு இருந்தனர், குறிப்பாக  குன்று இருக்கும் இடம்மெல்லாம் கந்தன் இருப்பான் என பக்தர்கள் சொல்லுவதை போல் கந்தன் என்பவர் சின்ன சின்ன குன்று மீது எல்லாம் ஏறி புகைபடம் எடுத்துக்கொண்டும் , கூட்டத்தை வழிநடத்திக்கொண்டும் சென்றார்,







     பாறை திட்டு உள்ள இடம் சற்று பெரிய இடமாக உள்ளது, அங்கு இருந்து தென்பகுதி பாதையில் காசிவிஸ்வநாதர் ஆலயம் செல்லும் பாதை பிரிகிறது. மேற்கே மலை உச்சி க்கு தர்ஹாவுக்கு தனிபாதை செல்கிறது, அங்கு ஓர் சிறிய தண்ணீர் குட்டையும், மூன்று பேர் சமாதியும் உள்ளது,
        அங்கு இருந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள வீடுகளையும் , கண்மாயையின் அழகையும் ரசித்தோம், ஆஹா என்ன அழகு திருப்பரங்குன்றம் கண்மாய்தான் எவ்வளவு பெரிது ஆனால் தண்ணீர் தான் இல்லை,  விளையாட்டு மைதானம் போல் உள்ளது ஒரு பகுதியில் இளைஞர்கள் கூட்டம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததையும், இன்னோரு பக்கம் வெள்ளரிதோட்டத்தையும் பார்க்கமுடிந்தது,
      கண்மாயின் தெற்கு பகுதிதான் தண்ணீர் வரும் பகுதி அங்கு தற்போது வீடுகள் அதிகமாகி தண்ணீர் வரும் பாதை அடைபட்டு போனதால் கண்மாய் வறண்டு காணப்படிகிறது, இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த கண்மாய் வீடுகளாய் மாறி விடுமோ எனற அச்சமும் தோன்றியது ,
       
        அந்த இடத்தில் 10 நிமிடம் ஓய்வுக்கு பின் தர்ஹா நோக்கி மலை ஏறினோம் , அந்த இடத்தில் இருந்து சற்றே கடினமான ஏற்றம்தான், பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் சுந்தர், இளஞ்செழியன்,உதயகுமார், சதீஸ், மதுமலரன்னும் ஏறுவதற்கும் பாதுகாப்புக்கும் அரணாக நின்று உதவினர்.
   
      காலை 8.30 மணிக்கு சிக்கந்தர் தர்ஹா வை அடைந்தோம், செல்லும் பாதையில் குரங்குகள் கூட்டம் ஆனால் செல்லுபவர்களை ஒன்றும் செய்யவில்லை ,கடந்த முறை காசிவிஸ்வநாதர் செல்லும் வழியில் குரங்கு தொல்லை அதிகம் குழந்தைகளிடம் இருந்து பைகளை பறித்து சென்றது,  இங்கு அந்த பயம் ஏற்படவில்லை ஆச்சரியம் தான்.

        தர்ஹாவின் வாசல் முஸ்லீம் பள்ளி வாசலை போல் இருந்தாலும் உள்பக்கம் முற்றிலும் ஓர் இந்து கோவில் போன்றே உள்ளது. மண்டபம், கொடிமர மண்டபம், கர்ப்பகிரகம் என இருப்பதை காணமுடிந்தது.1180 ம் ஆண்டுகளில் இங்கு இருந்த கோவிலில் சிக்கந்தர் என்னும் முஸ்லீம் மன்னர் தலைமறைவாக இருந்தபோது, இந்து மன்னர்களால் விட்டி கொல்லபட்டார், அன்று முதல் இது தர்ஹாவாக மாறினாலும் உள் கட்டமைப்பு மாறாமல் இருந்து வருகிறது.

         தர்ஹாவை விட்டு வெளிவரும் போது  சர்க்கரையும், விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது, முஸ்லீம்கள் வியாழக்கிழமை மாலை இங்கு வந்து  இரவு தங்கி வெள்ளிகிழமை சாமி கும்பிட்டு திரும்புகின்றனர்,

           தர்ஹாவின் வெளியே பசுமைநடை ஆர்வலர்கள் அமர அந்த இடத்தின் சிறப்பையும், புதிதாக வந்தவர்களை வரவேற்றும் அ.முத்திகிருஷ்ணன் பேசிய பின்  .  எழுத்தாளர். திரு. எஸ்.அர்ஷியா அவர்கள் அந்த இடத்தின் வரலாற்றை ஆர்வலர்கள் முன் எடுத்துரைத்தார், விரிவான அதே சமயம் எளிமையாக விளக்கினாரகள்.
       முஸ்லீம் மதத்தை மக்களிடம் பரப்பவந்தவர்கள், பின்னாளில் மதம் மாறிய மக்களை படை திரட்டி மதுரையை கைபற்றி சிக்கந்தர் மன்னரான வரலாற்றையும், 20 ஆண்டுகளுக்கு பின் வடக்கில் இருந்து வந்த இந்து மன்னர்களால் விரட்டப்பட்டு இந்த மலை மீது உள்ள கோவிலில் மறைந்து வாழ்ந்த வந்த சிக்கந்தர் மன்னரையும், படைதளபதிகளையும் கொன்றனர்,
    கொல்லப்பட்ட மன்னர் சிக்கந்தர் பாதுஷா புதைக்கப்பட்ட இடமே இன்று வணங்கும் இடமாகவும், வாழ்ந்த கோவில் தர்ஹாவாகவும் மாறி இன்று மதம் கடந்து இந்து , முஸ்லீம், கிருஸ்தவர்கள்  என வந்து வணங்கி செல்லும் இடமாக திகழ்கிறது என்றார் கேட்க கேட்க மலைப்பாக இருந்தது.

     அர்ஷியாவுக்கு பின் திருமங்கலம் கவிஞர். திரு.ஷாஜஹான் அவர்கள் பேசினாரகள். தர்ஹா இன்று மதம் கடந்து மக்கள் வணங்கும் இடமாக மாறிவருவதை முஸ்லீம் தீவிர வாதிகள் விரும்பவில்லை அல்லாவை தவிர யாரும் வணங்குவதற்குரியவர் அல்ல எனவே இது போன்ற தர்ஹாவை அழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை மதம் கடந்து வணங்கும் மக்கள் ஒன்று கூடி காக்க வேண்டும், என்றார்.  தர்ஹாவுக்கு முன் இப்படியொரு ஆபத்து உள்ளதை அறிந்துகொள்ளமுடிந்தது.
     
            கீழ் இருந்து மலையை பார்க்கும் போது மரங்கள் அற்ற மலையாக தெரிந்தாலும் அங்கு மரங்கள் அதிகம் காணப்பட்டது,
      மலையின் உச்சியில் இருந்து நான்கு திசையிலும் காணமுடிந்தது, அழகை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத ரசிக்கமட்டுமே முடிந்த கவிஞன் ஆனேன், ரயில் பூச்சியாக சென்ற ரயிலின் அழகை சொல்லுவதா ,பஸ்களும், கார்களும் ரோட்டில் சென்றது மொம்மையாக தெரிந்த அழகை சொல்லுவதா, சுற்றிலும் பார்த்து ரசிக்கும் பசுமைநடை ஆர்வலர்களின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தை சொல்லுவதா ..முடியாது யாராலும் வர்ணிக்க முடியாது என தோன்றியது...

    மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம், சூரியன் மேகத்தை விட்டு அவ்வம்போது வெளிவந்து எட்டிபார்த்து சென்றான், ஏறிய போது இருந்த சிரமம் இறங்கும்போது தெரிய வில்லை, அடிவாரத்தில் உள்ள கோவிலில் காலை உணவு வழங்கப்பட்டது, அன்பால் வழங்கப்பட்ட உணவு சிறிதானாலும், மனநிறைவாக இருந்தது.
 
  கவிஞர். திருமதி. தீபாநாகராணி மலை இறங்கும் போது சொன்ன வார்த்தை. மலையின் கீழ் கந்தர், மலையின் மேல் சிக்கந்தர். என்றார், ஆம் உண்மை தான் திருப்பரங்குன்றம் மத ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறது

        மலை உச்சியில் நின்ற போது மதுரையில் எத்தனையோ பேர் உள்ளனர் ஆனால் அவர்களில் பலருக்கு கிட்டதா அனுபவம் பசுமைநடை ஆர்வலர்களுக்கு கிட்டியுள்ளது..என மனதிற்குள் நினைத்துகொண்டேன்.

   மாலை மலை ஏறி இரவு ஒளிவெள்ளத்தில் மதுரையின் அழகை ரசித்திவிட்டி வரவேண்டும் என ஆசை மனதில் தோன்றியது.  ஆசையை முத்துகிருஷ்ணனிடம் கூறிவிட்டு ,  பசுமை நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.....

தர்ஹாவின் முன் வாசல்




எழுத்தாளர். அ.முத்திகிருஷ்ணன் உரை

எழுத்தாளர். எஸ்.அர்ஷியா 

கவிஞர் ஷாஜஹான் 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 


கவிஞர் .பேனா மனோகரன் அவர்களுடன் விருதுநகர் நண்பர்கள்



இனிய நண்பர் எஸ்.அர்ஷியாவுடன்

5 கருத்துகள்:

  1. பசுமை நினைவுகள் - உங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தாங்கள் வர வேண்டும் என்பது தான் ஒவ்வொரு முறையும் விரும்புகிறோம். அடுத்தமுறை வாருங்கள்

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு... பசுமை நடையின் இது போன்ற உங்களின் பதிவுகள் நடையை மீண்டும் ஒரு முறை நினைவலைகளில் வந்து செல்ல உதவியாக உள்ளது. இம்முறை உங்களின் கட்டுரைக்கு நிழற்படங்கள் அதிகம் மெருகேற்றியுள்ளன. அனைத்து நிழற்படங்களும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் தோழரே....

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மனத்தை போல் உங்கள் எழுத்தும் பளிச். பாராட்டுவதற்க்கும் ஒரு மனம் வேண்டும், வயதில் சிறியவள் ஆனாலும் என்னையும் உங்கள் எழுத்தில் பதிவு செய்ததற்க்கு நன்றி. இந்த பசுமை நடை பதிவுகள் என்றும் உங்கள் மூலம் என் நினைவுகளில் பசுமையாகவே இருக்கும். என் மனமார்ந்த நன்றிகள் மாமா.

    பதிலளிநீக்கு